என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புழல் ஜெயிலில் பெண் போலீசை தாக்கிய வெளிநாட்டு கைதி
- புழல் பெண்கள் சிறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
- போலீசார்கள் அந்த கைதியை தடுத்து நிறுத்தி பெண் போலீசை மீட்டனர்.
புழல் பெண்கள் சிறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு திருப்பூர் மாவட்டத்தில் மோசடி வழக்கில் கைதான உகாண்டா நாட்டை சேர்ந்த நசமா சரம் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் உறவினர்கள் கைதிகளுக்கு கொடுத்த பொருட்களை வழங்கும் பணியில் சிறை காவலர் அயனிங் ஜனாதா ஈடுபட்டார். அப்போது கைதி நசமா சரம், பெண் போலீஸ் அயனிங் ஜனாதாவை சரமாரியாக தாக்கினார். இதை பார்த்த மற்ற போலீசார்கள் அந்த கைதியை தடுத்து நிறுத்தி பெண் போலீசை மீட்டனர்.
இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






