search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூகம்பம்"

    புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NaturalDisasters
    நியூயார்க்:

    பூமி வெப்பமயமாகுவதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. அது குறித்த அறிக்கையை ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 1998 முதல் 2017-ம் ஆண்டுவரை சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட புயல், வெள்ளம், பூகம்பம், போன்ற பேரழிவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

    புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பேரழிவுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அங்கு 944.8 பில்லியன் டாலர் (ரூ.75 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சீனா 492.2 பில்லியன் டாலர் (ரூ.36 லட்சம் கோடி) இழப்பும், ஜப்பானுக்கு 379.5 பில்லியன் டாலர் (ரூ.30 லட்சம் கோடி) இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடி (79.5 பில்லியன் டாலர்) இழப்பு, பிரிட்டோ ரிகோவுக்கு 71.7 பில்லியன் டாலர் (ரூ.5 லட்சம் கோடி) இழப்பீடும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி (57.9 பில்லியன் டாலர்), இத்தாலி (56.6 பில்லியன் டாலர்) பிரான்ஸ் (48.3 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

    கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பேரழிவுகளின் போது 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 440 கோடி மக்கள் காயம் அடைந்துள்ளனர். இக்கால கட்டத்தில் சர்வதேச அளவில் 56 நிலநடுக்கங்களும், சுனாமியும் ஏற்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 234 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அறிக்கை சர்வதேச பேரிடர் தடுப்பு தினமான அக்டோபர் 13-ந்தேதி அதாவது நாளை வெளியிடப்படுகிறது. #NaturalDisasters
    ×