search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி கட்டிடங்கள்"

    • காசிநாதபுரம் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை பணிகளை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • புதிய பள்ளிக் கட்டிடங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பள்ளி மாணவர்களுடன் திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சி காசிநாதபுரம் கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள புதிய சிமெண்ட் சாலை பணிகளை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால்விநாயகம், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகராம், புதுப்பட்டி கூட்டுறவு சங்கம் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதம்புத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பள்ளி மாணவர்களுடன் திறந்து வைத்தார்.

    இதில் மருதம்புத்தூர் ஊராட்சி தலைவர் பூசத்துரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    வெம்பாக்கம் ஒன்றியத்தில்.கனிகிலிப்பை கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், புதிய சிமெண்டு சாலை, பூனை தாங்கல் ஊராட்சி சேனியநல்லூர் கிராமத்தில் பயணியர் நிழற்குடை, மாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான கட்டிடம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜு தலைமை வகித்தார்.வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகதிறந்து வைத்தார்.

    இதில் மாவட்டஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் ஜே.கே. சீனிவாசன், சங்கர், தினகரன், ஞானவேல், திமுக நிர்வாகிகள் பார்த்திபன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 6 அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
    • உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனில் ரூ1.68கோடி மதிப்பீட்டில் 6 அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பணிகள் தொடஙகப்பட்டது. உடன்குடி யூனியனுக்குட்பட்ட ராமசாமிபுரம், தைக்காவூர், செம்மறிக்குளம், குமாரசாமிபுரம், சிவலூர், அத்தியடிதட்டு ஆகிய 6 இடங்களில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பபள்ளிகளின் கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்து இருப்பதாக ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பள்ளிகளுக்கு தலா ரூ.28லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய கட்டிடங்கள் கட்டிட முதல்-அமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பள்ளிகட்டிடங்கள் கட்டுவதற்கு அளவீடு செய்யப்பட்டு பணிகளை உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாண்சிராணி, பொறியாளர் ஜெயபால், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×