search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லடம் கொலை"

    பல்லடம் அருகே கொலை செய்யப்பட்டு பேரலுக்குள் திணிக்கப்பட்டிருந்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணையில் அடையாளம் காணப்பட்டது.
    பல்லடம்:

    பல்லடம் கிரிச்சி பாளையத்தில் செந்தில் (வயது 40) என்பவர் இளம்பெண்ணுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில வாரங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலேயே இருந்தது. வீடு பூட்டியே இருப்பதால் அந்த வீட்டில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் குடியேற முடிவு செய்து வீட்டை சுத்தம் செய்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பேரலில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தது.

    காமநாயக்கன்பாளையம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். பெண்ணின் கையில் எஸ்.எல். என்ற ஆங்கில எழுத்து பச்சை குத்தப்பட்டிருந்தது. தலைமறைவாக உள்ள செந்தில் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் உள்ள மில்லில் பிட்டராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. அங்கு வேலை செய்த மற்ற பெண் தொழிலாளர்களிடம் பச்சை குறித்து கேட்டபோது இங்கு வேலை செய்த லதா என்பவர் கையில் எஸ்.எல். என்று பச்சை குத்தியிருந்தார் என்று கூறினர்.

    லதா குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லதா கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள சாவக்காட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர் களிடம் நடத்திய விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது

    லதாவுக்கும், தாராபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் திருமணமானது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் பெயரும், தனது பெயரும் சேர்த்து ஆங்கில எழுத்தில் எஸ்.எல். என்று பச்சை குத்தியுள்ளார்.

    இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். அதன்பின்னர் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    அப்போது அங்கு பிட்டராக இருந்த தாராபுரம் சின்னகாம்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தான் கிரிச்சிபாளையத்தில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய சில வாரங்களில் லதா கொலை செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள செந்திலை பிடித்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.
    பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே இளம்பெண்ணை கொன்று உடலை பேரலுக்குள் திணத்த மில் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
    பல்லடம்:

    பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள இலவந்தி ஊராட்சி கிரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58) விவசாயி. இவருக்கு கிரிச்சிபாளையத்தில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.

    இந்த வீட்டில் அந்த பகுதியில் உள்ள நூல் மில்லில் வேலை பார்த்து வந்த செந்தில் (40) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவருடன் ஒரு இளம்பெண்ணும் அந்த வீட்டில் குடியிருந்ததாக தெரிகிறது. ஒருசில மாதங்கள் அவர்கள் இருவரும் அங்கு குடியிருந்து வந்தனர்.

    கடந்த சில வாரங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. அவ்வப்போது செந்தில் மட்டும் அங்கு வந்து சென்றுள்ளார்.

    வீடு பூட்டிய நிலையிலேயே இருப்பதால் அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு இந்த வீட்டை வாடகைக்கு தரும்படி அதன் உரிமையாளர் ராமசாமியிடம் கேட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை பிரகாசுக்கு வாடகைக்கு விடுவதற்கு ஒப்பு கொண்டுள்ளார். மேலும், அந்த வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து ஒரு அறையில் வைத்து விட்டு, நீங்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து கொள்ளுங்கள் என்றும் பிரகாஷிடம் அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து வீட்டில் உள்ள பொருட்களை அங்குள்ள ஒரு அறையில் பிரகாஷ் எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேரலை தூக்கி அறையில் கொண்டு வைக்க முயன்றார். ஆனால் அந்த பேரலை அவரால் நகர்த்த முடியவில்லை.

    பேரலின் வாய்ப்பகுதி அட்டை வைத்து இறுக்கமாக கட்டி அடைக்கப்பட்டிருந்தது. இதில் தண்ணீர் இருக்கலாம் என்று எண்ணிய அவர் அந்த பேரலின் வாய்பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அட்டையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த பேரலில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

    பேரலின் உள்ளே பார்த்த போது பெண் ஒருவரின் பிணம் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம்போட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் இதுகுறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கும், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.

    தகவலின்படி அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த பேரலில் இருந்த பெண்ணின் பிணத்தை வெளியே எடுத்து பார்த்தனர். அழுகிய நிலையில் இருந்த அந்த பெண் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாடகைக்கு தங்கிய செந்தில் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று அங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை.

    விசாரணையில் வாடகைக்கு இருந்தவர் தாராபுரம் சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது. அவரை தேடியபோது அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. செந்தில் தான் இளம்பெண்ணை கொன்று பேரலுக்குள் திணித்து மண்ணைபோட்டு மூடியிருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். அதன்படி செந்திலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பல்லடம் அருகே மின்வாரிய தொழிலாளரை அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செம்பியன் கோவில் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (39). இவரது தம்பி கஜேந்திரன் (29). இவர்கள் இருவரும் பெருந்தொழுவு மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று மாலை வேலை முடிந்து இருவரும் வீடு திரும்பினார்கள். அப்போது வழியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார்கள்.

    பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிற்கு வந்த பின்னரும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனை அவர்களது தந்தை சுப்பிரமணி கண்டித்தார். ஏன் இருவரும் சண்டை போட்டு கொள்கிறீர்கள் என சத்தம் போட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் தனது தந்தையை அடிக்க பாய்ந்தார். இதனை ரமேஷ் தடுத்தார். அப்போது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து தனது அண்ணன் ரமேஷ் தலையில் தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரமேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.கொலை செய்யப்பட்ட ரமேசுக்கு பூங்கொடி என்ற மனைவியும், சுதாகர் (12) என்ற மகனும் உள்ளனர்.
    ×