search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பர்வேஸ் முஷாரப்"

    • இறுதிச்சடங்கில் அதிபர் ஆரிப் ஆல்வியோ, பிரதமர் ஷெபாஸ் ஷெரீபோ கலந்துகொள்ளவில்லை.
    • ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்

    கராச்சி:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ம் தேதி அவரது உயிர் பிரிந்தது.

    இதையடுத்து அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் துபாயில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு கொண்டு வரப்பட்டது. இன்று கராச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள குல்மகர் போலோ மைதானத்தில் இறுதிச்சடங்குகள் மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பின்னர் அங்குள்ள ராணுவ கல்லறை தோட்டத்திற்கு முஷாரப் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    இறுதிச்சடங்கில் தற்போதைய அதிபர் ஆரிப் ஆல்வியோ, பிரதமர் ஷெபாஸ் ஷெரீபோ கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், கூட்டுப் படைகளின் தலைவர் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, முன்னாள் ராணுவத் தளபதிகள் கமர் ஜாவேத் பஜ்வா, அஷ்பக் பர்வேஸ் கயானி மற்றும் அஸ்லம் பெக் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ஷுஜா பாஷா, ஜாகீருல் இஸ்லாம் மற்றும் ஓய்வு பெற்ற பல்வேறு ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    முத்தாகிதா குவாமி இயக்கத்தின் (பாகிஸ்தான்) தலைவர்கள் காலித் மக்பூல் சித்திக், டாக்டர் ஃபரூக் சத்தார், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் அமீர் முகம், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவரும், சிந்து மாகாண முன்னாள் ஆளுநருமான இம்ரான் இஸ்மாயில், மத்திய தகவல் துறை முன்னாள் அமைச்சர் ஜாவேத் ஜப்பார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    சிந்து மாகாணத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அல்லது ஜமாத்-இ-இஸ்லாமியின் முக்கிய தலைவர்கள் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை. 

    • ராணுவ ஆட்சியை பிரகடன் செய்த முஷாரப், பாகிஸ்தான் பாராளுமன்றதை கலைத்து அரசியல் சட்டத்தையும் முடக்கினார்.
    • காஷ்மீர் பிரச்சனைக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 79. நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

    1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். தேச பிரிவினையின் போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது. 1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார். நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து 1999-ல் அதிகாரத்தை கைப்பற்றினார் .

    ராணுவ ஆட்சியை பிரகடன் செய்த முஷாரப், பாகிஸ்தான் பாராளுமன்றதை கலைத்து அரசியல் சட்டத்தையும் முடக்கினார்.

    2001-ல் பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற முஷாரப், காஷ்மீர் பிரச்சனைக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முஷரப் நீண்ட காலமாகவே 'அமிலாய்டோசிஸ்' என்கிற அபூர்வ நோயால் அவதிப்பட்டு வந்தார்.
    • 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற முஷரப் அதன் பிறகு பாகிஸ்தான் திரும்பவே இல்லை.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் கடந்த 1999-2008 வரை அதிபராக பதவி வகித்தவர் பர்வேஸ் முஷரப். முன்னாள் ராணுவ மந்திரியான இவர் கடந்த 2007-ம் ஆண்டு நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், மக்களின் போராட்டம் காரணமாக 2008-ம் ஆண்டு முஷரப் அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார்.

    பின்னர் 2013-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார். அப்போது பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப்பை கைது செய்ய அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலில் போட்டியிடவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் உடல்நிலையை காரணம் காட்டி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு கோர்ட்டில் அனுமதி கோரினார். கோர்ட்டு அனுமதி வழங்கியதால் 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். ஆனால் அதற்கு பிறகு அவர் பாகிஸ்தான் திரும்பவே இல்லை.

    இதற்கிடையில் பாகிஸ்தானில் அவசர நிலையை அமல் செய்த விவகாரத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் 2019-ம் ஆண்டில் பாகிஸ்தான் சிறப்பு கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இருப்பினும் அந்த தீர்ப்பை எதிர்த்து முஷரப் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லாகூர் கோர்ட்டு அவரின் மரண தண்டனையை ரத்து செய்தது. இதனிடையே துபாயில் வசித்து வரும் முஷரப் நீண்ட காலமாகவே 'அமிலாய்டோசிஸ்' என்கிற அபூர்வ நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சூழலில் முஷரப்பின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "முஷரப் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டன. அவர் குணம் அடைவது சாத்தியம் இல்லை. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என கூறியிருந்தனர். இந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் அதிபர் முஷரப்பை 'ஏர் ஆம்புலன்சு' (விமான ஆம்புலன்சு) மூலம் பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து, உயர் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "முஷரப்பை மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் குடும்பத்தினரின் சம்மதம் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு செய்யப்பட்டு வருகின்றன. இதில் 'ஏர் ஆம்புலன்சு'ம் அடங்கும். ராணுவம், அதன் முன்னாள் தலைவருக்கு ஆதரவாக நிற்கிறது" என கூறப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்.
    • இவர் 1999-ல் பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பதவிக்கு வந்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். இவர் 1999-ல் பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பதவிக்கு வந்தார்.

    78 வயதாகும் முஷாரப் உடல் நிலையை காரணம் துபாய்க்கு சென்று அங்கேயே வாழ்ந்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    முன்னாள் அதிபர் முஷாரப் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள் இதனை மறுத்துள்ளன.

    இந்நிலையில், துபாயில் உள்ள அவரது வீட்டில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அந்நாட்டு முன்னாள் தகவல் தொடர்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    பல்வேறு வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #PervezMusharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தேசத்துரோகம் உள்பட பல வழக்குகள் நடந்து வருகிறது. தற்போது அவர் துபாயில் தஞ்சமடைந்துள்ளார். பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியதால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷாரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷாரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 

    பின்னர், அந்நாட்டு தேசிய தகவல் பதிவு மையத்தின் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டதன் பேரில், முஷாரப்பின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கத்தை சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்தது. முஷாரப் நாடு திரும்ப வேண்டும், வழக்கை சந்திக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.

    இதற்கிடையில், அடுத்த மாதம் 25-ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் சித்ரால் தொகுதியில் போட்டியிட முஷரப் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்யவும், வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ளவும் வழிசெய்யும் விதத்தில் அவரது பாஸ்போர்ட் முடக்கம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

    இதற்கு முன்னதாக லாகூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் விசாரணையில் நேற்று முன்தினம் முஷாரப் ஆஜராக இறுதி கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால்,அவர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.

    இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றம் தன்னை அதிபர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் முஷரப் தாக்கல் செய்திருந்த மனுவின் மீது அன்றைய தினம் விசாரணை நடந்தது.

    அதில், நேற்று முஷாரப் ஆஜராக வேண்டும். அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. எனினும், அவர் ஆஜராகாத நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முஷாரப்புக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப்பின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கப்பட்டதை ரத்து செய்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. தற்போது அவர் துபாயில் தஞ்சமடைந்துள்ளார். பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியததால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 

    இந்நிலையில், அந்நாட்டு தேசிய தகவல் பதிவு மையத்தின் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டதன் பேரில், முஷாரப்பின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. முஷாரப் நாடு திரும்ப வேண்டும், வழக்கை சந்திக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.
    ×