search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறப்பு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் ராஜ்போரா பகுதியில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பணியில் இருந்த போலீசார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சமீர் அகமது மிர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார். சக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனை  கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.  
     
    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #MilitantsAttack
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வீடு திரும்பிய சப் இன்ஸ்பெக்டரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Pulwama #MilitantsShooting
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் செவா காலன் பகுதியில் குண்டுகள் துளைத்த நிலையில் போலீஸ்காரர் ஒருவரது உடல் கிடப்பதை அப்பகுதி மக்கள் இன்று கண்டனர். இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    விசாரணையில் அவர் ஸ்ரீநகர் சிஐடி பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் இம்தியாஸ் அகமது மிர் என்பதும்,  அவர் பணி முடிந்து வீடு திரும்பியபோது பயங்கரவாதிகள் அவரை சுட்டு கொன்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #Pulwama #MilitantsShooting
    மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். #MilitantsAttack
    பமாகோ:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா கிராமத்தில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு படைகள் மற்றும் ஐ.நா. அமைதி காப்பு இயக்கம் ஆகியவற்றின் மீது பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள கிராமத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் அப்பகுதியில் எதிர்ப்பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர்.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், அங்கிருந்த ஒரு லாரி மற்றும் மூன்று வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து சென்ற ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். #JammuKashmir #Firng
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாண்டிபோரா மாவட்டத்தில் ராணுவ வாகனத்தில் வீரர்கள் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தகவலறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பாதுகாப்பை பலப்படுத்தினர்.

    அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. #JammuKashmir #Firng
    ×