search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிட மாறுதல்"

    • ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
    • பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜகுரு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தர விட்டுள்ளார்.

    இதன்படி ஆர்.எஸ்.மங்கலம் நில எடுப்பு தனி தாசில்தார் பார்த்த சாரதி பரமக்குடி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய தமீம் ராசா, ராமநாதபுரம் சிவில் சப்ளை தனி தாசில்தாராக பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் சிவில் சப்ளை தனி தாசில்தார் தமிழ்செல்வி, திருவா டானை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய செந்தில்வேல் முருகன் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் டாஸ்மாக் குடோன் மேலாளர் சுரேஷ் குமார், ராமநாதபுரம் தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய முரு கேசன், ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஞானசிரோன் மணி, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய சேகர், பரமக்குடி நகர நிலவரி திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். முதுகுளத்தூர் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் சேதுராமன், ராமநாதபுரம் டாஸ்மாக் குடோன் மேலாளராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மரகதமேரி, கடலாடி தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய முருகவேல் உப்பூர் அனல் மின் திட்ட அலகு 2 நில எடுப்பு தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய உமா மகேஸ்வரி, ராமேசுவரம் தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜகுரு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலராகவும், இங்கு பணியாற்றிய சுகுமாறன், பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோயில் நிலங்கள் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது.
    • 472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

    திருப்பூர் :

    தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், இடமாறுதல் கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது.

    முதல் நாளன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி, பல்லடம் மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் அனைத்து ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இதில் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டு விரும்பும் இடங்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் 472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் வெளி மாவட்டத்தில் பணியாற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  

    ×