search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குனி உத்திர"

    • கடந்த 29-ந் தேதி கொடியேற்றம், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
    • பக்தர்களின் வெள்ளத்தில் தேர்கள் ஆடி அசைந்து சென்று பின்னர் நிலையடைந்தது.

    காங்கயம் :

    காங்கயம்அருகே மடவளாகத்தில் ஆருத்ர கபாலீ ஸ்வரர்மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமூகத்தை சேர்ந்த கோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய 4 குலத்தவர்களின் குல தெய்வங்களாக அரு ள்பாலித்து வருகின்றன.

    சமீப காலமாக இக்கோ வில்கள் குலத்தவர், உபய தாரர், நன்கொடையாள ர்கள் மூலம் புனர மைப்பு செய்யப்பட்டு கடந்த 29-ந்தேதி பஞ்சமூ ர்த்திகள் பங்குனி உத்திர 7-ம் ஆண்டு தேர் திருவிழா கிராமசாந்தி , கொடியேற்றம், சுவாமி களின் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொட ங்கியது. தொடர்ந்து யாக பூஜை, தீபாரா தனைமற்றும் 4 குலத்தவ ர்களின் மண்டப கட்டளை, பஞ்சமூர்த்தி களின் திருவீதி உலா ,திருக்கல்யாண உற்சவம், மற்றும் காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் ஒயிலாட்டம், பெருசலங்கையாட்டம், மகா அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து பஞ்சமூ ர்த்திகள் எனும்5 தேர்களும் வண்ண மலர்அலங்கா ரத்துடன் வடம் பிடித்து இழுக்க ப்பட்டது.பல்லாயிர க்கணக்கான பக்தர்கள், குலத்தவர்கள், உபயதா ரர்கள்,நன்கொடையா ளர்கள் உள்பட அனைவரது கரகோஷத்துடன் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து கோவில்களை சுற்றி சுமார் ¾ கி.மீ., தூரத்திற்கு பக்தர்களின் வெள்ளத்தில் தேர்கள் ஆடி அசைந்து சென்று பின்னர் நிலையடைந்தது.விழாவில்\எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, சின்னராஜ், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கல்யாண சுந்தரம், திருப்பூர் மாநகரா ட்சியின் 4-வது மண்டல தலைவரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலா ளருமான இல.பத்மநாபன், காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகேஷ்குமார், நகராட்சி தலைவர் சூரியபி ரகாஷ், மாவட்ட பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலர் கிருஷ்ணவேணி, ,திருப்பூர்மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் குமரது ரை, காங்கயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், பாப்பினி பஞ்சாயத்து தலைவர் கலாவதி பழனிசாமி, யூனியன் கவுன்சிலர்களான மைனர் பழனிசாமி, சுதா ஈஸ்வரமூர்த்தி, காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் லதா மகேஷ்குமார், ராம்ராஜ் காட்டன் நிறுவ னர் நாகராஜன், காங்கயம் ஆடிட்டர் சண்மு கசுந்தரம், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிைமயாளர்கள் சங்க செயலாளர்தாராபுரம் மணி, திருப்பூர் மாவட்ட குத்துச்சண்டை சங்க செயலாளர் அப்பு சிவசுப்பி ரமணியன், ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி தாளாளர் பழனிசாமி மற்றும் பாப்பினி, வீரசோ ழபுரம் ஆகிய கிராம பொதுமக்கள் உள்பட பலரும் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நடுவர் ராஜா தலைைமயில் சிறப்பு நகைச்சுவை பட்டிம ன்றமும் நடந்தது.மேலும்பா ரிவேட்டை, தெப்ப உற்சவ வீதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று 7-ந்தேதி கொடி இறக்குதல், தீர்த்தவாரி, மஞ்சள் நீராடுதல், பிரசாதம் வழங்குதல் ஆகியவற்றுடன் விழா முடிவடைந்த து. விழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், மருத்து வஉத விக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக தலைவர் தங்கமுத்து தலைமையில் தலைவர் வரதராஜ், செயலாளர் ராமசாமி, பொருளாளர் அர்ஜூனன் முன்னிலையில் கோவிலின் கொங்கு வோளாளர் , தோடை, கண்ணந்தை, காடை, கீரை குலத்தோர் சங்கத்தினரும், பாப்பினி ,வீரசோழபுரம் கிராம பொதுமக்களும் மிக சிறப்பாக செய்திருந்தனர். முன்னதாக அனைவரையும் பாப்பினி அம்மன் கோவில் தலைவர் தம்பி வெங்கடாசலம், அன்ன தான கமிட்டி பால சுப்பிர மணியம் மற்றும் வரவேற்பு குழுவினர் வரவேற்றனர்.

    • பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
    • குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கோபி, 

    கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்து வருகிறது. முன்னதாக கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 30-ந் தேதி காலை 10 மணியளவில் கோவிலுக்கு முன்புள்ள கொடி மரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதை தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது. 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள், சாமி தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணி அளவில் திருப்படி பூஜை விழாவும் நடைபெற்றது.

    காலை 9மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி இன்றுமாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

    இதை யொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை கோயில் அடிவாரத்தில் அன்னதானம் நடைபெறுகிறது.

    நாளை 6-ந் தேதி தேதி மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம்வருதல்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மாலை 6.30 மணி அளவில் வள்ளி தெய்வானை உடன் சண்முக பெருமான் மலர் பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • கொடிமரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவி லில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி யுடன் தொடங்கியது.

    இன்று காலை 10 மணியளவில் கோவிலுக்கு முன்புள்ள கொடிமரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொ டர்ந்து யாகசாலை பூஜை நடை பெற்றது.

    நாளை முதல் வரும் 3-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள், சாமி தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 4-ந் தேதி கல்யாண சுப்பிர மணியருக்கு திருக்கல்யாண உற்சவம் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. முன்னதாக காலை 9 மணி அளவில் சண்முகருக்கு சிகப்பு சாத்தி அலங்காரம் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து 5-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணி அளவில் திருப்படி பூஜை விழாவும் நடைபெற உள்ளது.

    காலை 9 மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுக்கி றார்கள்.

    இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் அடிவா ரத்தில் அன்னதானம் நடை பெற உள்ளது. 6-ந் தேதி மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மாலை 6.30 மணி அளவில் வள்ளி தெய்வா னை உடன் சண்முக பெரு மான் மலர் பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • பங்குனி உத்திர தேரோட்டம் கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
    • 3 -ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய திருதலங்களில் சென்னிமலை மலை முருகன் கோவில் திகழ்ந்து வருகிறது.

    இங்கு முருகனுக்கு தைப் பூசதேர், பங்குனி உத்திர தேர் என 2 திருத்தேர் உள்ளது. ஆண்டு தோறும் தைப்பூச தேரோட்டமும், பங்குனி தேரோட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது.

    இதையொட்டி இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. 3 -ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 4-ந் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

    இதை தொடர்ந்து 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ரதாரோகணக்காட்சியும், தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் தேவஸ்தான மண்டபத்தில் அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பாக அன்னதானம் நடக்கிறது.

    மேலும் அன்று மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 7 – ந் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை உதவி ஆணையாளரும் தக்காருமான அன்னக்கொடி,செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் ரவிக்குமார், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், செய்து வருகின்றனர்.

    ×