search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரில் ஆய்வு"

    • மர்மவிலங்கால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • விலங்கை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    அறச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தொழுவங்களில் கட்டப்பட்டுள்ள கால்நடைகளை இரவில் வரும் மர்மவிலங்கு இழுத்து சென்றுவருகிறது. இதனால் அச்சம் அடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

    இதனை அடுத்து வீட்டுவசதித்துறை அமை ச்சர் முத்துசாமி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் அறச்சலூரில் மர்மவிலங்கால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உலாவும் விலங்கை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். இதில் வனத்துறை அதிகாரி சுதாகரும் கலந்து கொண்டார்.

    • பேரிடர் மீட்புபணியினை மேற்கொள்ள மொத்தம் 106 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் உள்ளனர்.
    • மக்களை பத்திரமாக மீட்டு தங்க வைப்பதற்காக 10 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, உதவி காவல் கண்காணிப்பாளர் பிருந்தா, வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி, நகர்மன்ற துணைத் தலைவர் ச.செந்தில் குமார், வட்டாட்சியர் அருள்முருகன், உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    முன்னதாக, ஊமையான்டி முடக்கு பகுதியில் சாலையில் மரம் விழுந்ததையடுத்து நெடுஞ்சாலை துறையினரால் மரம் அகற்றப்பட்டு வருவதையும், வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமினையும், கூழாங்கல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரை நேரில் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, வால்பாறையில் மழை பாதிப்புகள் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. வால்பாறை பகுதிகளில் கனமழை வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள காரணத்தால், பேரிடர் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை மீட்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

    தேவையான மீட்புக்கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் மீட்புபணியினை மேற்கொள்ள, ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் உதவி ஆய்வாளர், மீட்பு படையினர் 104 காவலர்கள் என மொத்தம் 106 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் உள்ளனர்.

    மழையினால் 6 இடங்களில் விழுந்த மரங்களையும், 2 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவையும், நெடுஞ்சாலைத்துறை மூலம் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனையில் தேவையான மருத்துவர்கள், படுக்கைவசதிகள், மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன. மழையினால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பத்திரமாக மீட்டு தங்க வைப்பதற்காக 10 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னேற்ப்பாட்டு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மரவள்ளிகிழங்கு பயிரிடுவதற்காக ரூ.40 ஆயிரம் மானியத்திலான உபகரணங்களை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதையும்,

    அஞ்சூர் ஊராட்சி, அஞ்சூரில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும்,

    கொந்தளம் ஊராட்சி தட்டம்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.46 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்று சுவர் அமைக்கப்ப–ட்டுள்ளதையும்,

    கொந்தளம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் நர்சரி மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் நர்சரிக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கம்பி வலை மற்றும் பசுமைவிரிப்பு அமைக்கப்பட்டுள்ளதையும்,

    கொந்தளம் ஊராட்சி கள்ளிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும்,

    அதேபகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18.15 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இருப்பு கிடங்கு கட்டப்பட்டு வருவதையும்,

    கொளத்துப்பாளையம் ஊராட்சி கொம்பனைப்புதூரில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும்,

    அதே பகுதியில் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கான கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மற்றும் கொளத்துப்பாளையம் சந்தை வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை மற்றும் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கொந்தளம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் 1 விவசாயிக்கு சுமார் 2 எக்டர் பரப்பளவில் பரப்பு விரிவாக்கும் மரவள்ளிகிழங்கு பயிரிடுவதற்காக ரூ.40 ஆயிரம் மானியத்திலான உபகரணங்களை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், கல்பனா, கொடுமுடி தாசில்தார் முத்துகிருஷ்ணன், சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • இது வரை ரூ.1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட எம்மாம்பூண்டியில் அமைந்துள்ள அத்திக்கடவு-அவிநாசிதிட்ட 5-ம் நீரேற்று நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

    விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு- அவிநாசிதிட்டமானது பவானி ஆற்றில் காளிங்க ராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில்

    நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில்

    32 பொதுப்பணி த்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 குளங்க ளுக்கு நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்ப ட்டுள்ளது.

    மேலும் தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் ஆறு நீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக் கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன் பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய இடங்களில் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.

    மேலும் ஆழ்குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடி வடைந்துள்ளது. (மொத்த நீளம் 267.5 கி.மீ) மற்றும் எம்.டி.பி.இ. குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போத துரிதமாக நடைபெற்று வருகிறது.

    தற்சமயம் சுமார் 797.11 கி.மீ. அளவு எம்.டி.பி.இ. குழாய் (மொத்த நீளம் 797.8 கி.மீ) பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு ள்ளன.

    மின்மாற்றிகள், ஏவுபம்பு கள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலைய ங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

    மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிவுற்று ள்ளது. மேலும் நிலம் பயன்பாட்டு உரிமை பெறும் பணி 100 சதவீதம் முடிவுற்று ள்ளது.

    இது தொடர்பாக நடைபெற்ற நீர்வளத்துறை உயர்மட்டக் கூட்டத்தின் நிகழ்வு குறிப்பு அறிக்கை தலைமைச் செயலாளர் ஒப்புதல் அளிக்கப்பட்டு திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    குளம், குட்டைகளில் ஓ.எம்.எஸ். கருவி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 1044 எண்கள் பொருத்தப்பட்டுள்ளது (மொத்தம் - 1045 எண்கள்). இத்திட்டத்திற்கு இது வரை ரூ.1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 20-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை 6 நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக் குழாய்களில்106.80 கி.மீ நீளத்திற்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீரேற்று நிலைய ங்களிற்கு இடையிலுள்ள கிளைக்குழாய் மற்றும் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓ.எம்.எஸ். கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

    மேலும் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சரியான முறையில் செல்கிறதா? என்பது குறித்து ஆய்வுப்பணிகள் அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அனைத்து பணிகளும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி எம்மாம்பூ ண்டியில் அமைந்துள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5-ம் நீரேற்று நிலையத்திலிருந்து சோதனை ஓட்டமாக அருகில் உள்ள குளத்திற்கு நீர் செல்வதையும் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் மன்மதன் (பெருந்துறை), நரேந்திரன் (அவிநாசி), நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.3.32 கோடியில் பணிகள் நடந்து வருவதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
    • உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய ரூர்பன் திட்டம் வாணியங்குடி தொகுப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் வாணியங்குடி, சோழபுரம், சக்கந்தி, காஞ்சிரங்கால், அரசனிமுத்துப்பட்டி, கொட்டகுடி, கீழ்பாத்தி மற்றும் இடையமேலூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தலா ரூ.47.42 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு பஞ்சா யத்திலும் சூரிய உலர்த்தி, கடலைமிட்டாய், பால்கோவா உற்பத்தி, கால்நடை தீவனம் உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு ஆகிய 6 எந்திரங்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி பணி நடைபெற உள்ளது.

    உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் தோட்டக்கலைத்துறை மூலம் எந்திரங்கள் நிறுவும் பணி மற்றும் காஞ்சிரங்கால் பஞ்சாயத்து கிராமத்தில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேர் பரப்ப ளவில் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை ரூர்பன் நர்சரி செயல்பாடுகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் வானதி, தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×