search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லையில் மழை"

    நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு பல்வேறு இடங்களில் பெய்த மழை நேற்று முதல் இன்று காலை வரை எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை.

    நெல்லை:

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முதல் இன்று காலை வரை நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை.

    வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் மழை எதுவும் பெய்யாவிட்டாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் குறைந்த அளவு வந்து கொண்டு இருக்கிறது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 679 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 604 கனஅடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 120.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 132.02 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 457 கனஅடி தண்ணீர் வருகிறது. இன்று காலை அணை நீர்மட்டம் 97.60 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை.

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 93.11 அடியாக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டுகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது. நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. மதியம் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.

    பின்னர் பல பகுதிகளில் கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 70 மில்லிமீட்டர் மழை பதிவானது. சிவகிரியில் 37 மில்லிமீட்டர் மழையும், சங்கரன்கோவிலில் 25 மில்லிமீட்டர் மழையும், ஆய்க்குடி மற்றும் கருப்பாநதியில் தலா 24 மில்லிமீட்டர் மழையும் பெய்தது.

    பாளையில் 18.20 மில்லிமீட்டர் மழை, சேர்வலாறில் 18 மில்லி மீட்டர் மழை, நெல்லையில் 14 மில்லிமீட்டர் மழை, ராதாபுரத்தில் 6 மில்லிமீட்டர் மழை, செங்கோட்டையில் 2 மில்லிமீட்டர் மழை பதிவானது. மலைப்பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 100.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 604 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 85.89 அடியாக இருந்தது. இரவு பெய்த மழையினால் இந்த அணை நீர்மட்டம் இன்று 93.11 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.60 அடியாக உள்ளது.

    சங்கரன்கோவில் தொடர் மழையினால் சங்கரன்கோவில் இருமன்குளத்தை சேர்ந்த வேல்சாமி, தங்கப்பாண்டி ஆகியோரது வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இன்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக பாபநாசம் அணை, குற்றால அருவிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    ராதாபுரம் கடற்கரை பகுதியிலும், பாளை நகர் பகுதிகளிலும் அதிகளவு மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக நாங்குநேரி பகுதியில் 31 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சிவகிரி பகுதியில் 20 மில்லி மீட்டரும், பாளையில் 12.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை இல்லாவிட்டாலும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. சேர்வலாறு மலைப் பகுதியில் 8 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 1.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 285.30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணைக்கு வரும் 604 கன அடி தண்ணீர் அப்படியே பாபநாசம் கீழ் அணை வழியாக வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 13 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை. இன்று காலை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84.40 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கும் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியது. இன்று காலை அணைகளின் நீர்மட்டம் கடனாநதி-63.10, ராமநதி -47.25, கருப்பாநதி-57.66, குண்டாறு-32.38, வடக்கு பச்சையாறு-20, நம்பி யாறு-19.94, கொடு முடியாறு-32.50, அடவிநயினார்-86 அடிகளாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வர தொடங்கியுள்ளது. மெயினருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் இதமாக கொட்டுகிறது.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    நாங்குநேரி-31, சிவகிரி-20, கருப்பாநதி-16, பாளையங்கோட்டை-12.4, அடவிநயினார்-11, சேர்வலாறு-8, செங்கோட்டை-6, சேரன்மகாதேவி-4.4, கடனாநதி-4, தென் காசி-3, சங்கரன் கோவில்-3, ஆய்க்குடி-2.8, நெல்லை-2.7, ராமநதி-2, மணிமுத்தாறு-1.2, குண்டாறு-1.
    சேர்வலாறு அணையில் எஞ்சியிருந்த தண்ணீர் பாபநாசம் கீழ் அணை வழியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால் சேர்வலாறு அணையில் நீர்மட்டம் குறைந்து சகதி மட்டுமே 19.68 அடிக்கு உள்ளது. #Servalardam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நம்பியாறு அணை பகுதியில் இன்று காலை வரை அதிகபட்சமாக 35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    திருக்குறுங்குடி நம்பியாறு பகுதியில் நேற்று இரவு சூறைக்காற்றும் வேகமாக வீசியது. அம்பையில் 11.4 மில்லி மீட்டரும், நாங்குநேரியில் 18 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 3 மில்லி மீட்டரும், கருப்பாநதி அணை பகுதியில் 1 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் லேசாக சாரல் மழை பெய்தது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 20.02 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து கால்வாய்களில் வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்மேற்கு பருவமழையில் சேர்வலாறு அணை முழு கொள்ளளவும் நிரம்பியது. இந்த நிலையில் சேர்வலாறு அணையில் இருந்து எவ்வளவு தண்ணீர் பாபநாசம் அணைக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு தண்ணீர் பாபநாசம் அணைக்கு அனுப்பப்பட்டது.

    இதனால் பாபநாசம் அணையில் தற்போது 106.90 அடி நீர்மட்டம் உள்ளது. சேர்வலாறு அணையில் எஞ்சியிருந்த தண்ணீர் பாபநாசம் கீழ் அணை வழியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் வேகமாக இறங்கி நேற்று முன்தினம் 51 அடியிலும், நேற்று 34.51 அடியாகவும் நீர்மட்டம் குறைந்தது. அது இன்று முற்றிலும் குறைந்து சகதி மட்டுமே 19.68 அடிக்கு உள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் தண்ணீர் எதுவும் இல்லை என்றும் நீர் இருப்பு விபரத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் சேர்வலாறு அணை இந்த ஆண்டில் 3-வது முறையாக வறண்டுள்ளது. அங்கு பராமரிப்பு பணி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    மணிமுத்தாறு அணையில் இன்று 84.65 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதுபோல மற்ற அணைகளில் நீர்மட்டம் நேற்றைய அளவிலேயே தொடர்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியாறு-35, நாங்குநேரி-18, அம்பை-11.4, சேரன்மகாதேவி-3, சங்கரன் கோவில்-2, மணி முத்தாறு-1.8, பாளை-1.4, கருப்பாநதி-1 #Servalardam

    நெல்லை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் மலைப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #PapanasamDam
    நெல்லை:

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி 3 மாதங்கள் மழை பெய்யும். குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்யும். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சரியாக பெய்யாததால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்த ஆண்டு வழக்கம்போல தொடங்கிய பருவ மழை தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையினால் அணைகள், குளங்கள் நிரம்பின. மாவட்டத்தில் உள்ள கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணை ஆகிய 6 அணைகள் நிரம்பின. பிரதான பாசன அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திற‌ந்துவிடப்பட்டுள்ள‌ன.

    இந்த நிலையில் கடந்த‌ 10 நாட்களாக மழை குறைந்தது. எனினும் அணைகளுக்கு மிதமான அளவு நீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மலைப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மலையை ஒட்டியுள்ள நகர பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    அணைப்பகுதியில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 49 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 113 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1513 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1405 கன அடி தண்னீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் 121 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74.80 அடியாகவும் உள்ளன. அணைப்பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:

    குண்டாறு-49, செங்கோட்டை-28, அடவி நயினார் அணை-20, தென்காசி-19, பாபநாசம்-15, சேர்வலாறு-10, ராதாபுரம்-8, கொடுமுடியாறு-7, அம்பை-4, மணிமுத்தாறு-3, ஆய்க்குடி-2.8, சேரன் மகாதேவி-2.4, பாளை- 2.2, நாங்குநேரி-2, நெல்லை-1. #PapanasamDam

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைகளுக்கு குறைந்த அளவு தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது. #NellaiRain
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இயல்பு நிலையை விட இந்த ஆண்டு 35 சதவீதம் அதிகம் மழை பெய்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளை தவிர மீதமுள்ள 9 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதில் சிறிய அணைகளான அடவி நயினார், கொடு முடியாறு, குண்டாறு, கருப்பாநதி, ராமநதி, கடனாநதி ஆகிய 6 அணைகள் நிரம்பி வழிந்தது. பெரிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய 3 அணைகளிலும் 75 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியது.

    இதைத்தொடர்ந்து 9 அணைகளில் இருந்தும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 381 ஹெக்டேர் நிலத்தில் கார் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லை. இன்று காலை அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லி மீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 7 மில்லி மீட்டர் அளவுக்கும், கருப்பாநதி அணை பகுதியில் 1 மில்லி மீட்டர் அளவுக்கும் லேசான சாரல் மழை பெய்துள்ளது. ஆனாலும் ஏற்கனவே பெய்த மழை மற்றும் சாரல் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து நன்றாக விழுகிறது. அணைகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1025.81 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கனஅடி தண்ணீரும், கீழ் அணையில் இருந்து 1405 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 115.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 122.44 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 27கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. ஆனால் அணையில் இருந்து விவசாயத்துக்கு வினாடிக்கு 375 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 77.72 அடியாக உள்ளது.

    இது போல கடனாநதி -83.50, ராமநதி-80.75, கருப்பாநதி-71.20, குண்டாறு-36.10, கொடு முடியாறு-46, அடவி நயினார்-130.75, வடக்கு பச்சையாறு-9.50, நம்பியாறு-11.51 அடியாக நீர்மட்டம் உள்ளது. #NellaiRain
    தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் 150 குளங்கள் நிரம்பின. மேலும் 500 குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. #NellaiRain
    நெல்லை:

    தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் 6 அணைகள் நிரம்பியுள்ளன. மழை காரணமாக தென்காசி சுற்றுபகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தென்காசி மற்றும் சுற்றுவட்டரா பகுதியில் தென்காசி சீவலப்பேரிகுளம், கீழப்புலியூர், சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, கம்பிளி, ஆகிய பகுதிகளில் உள்ள பல குளங்கள் உள்ளன. இதற்கு குற்றாலம் அருவி, குண்டாறு அணை, அடவிநயினார் அணை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பாசனம் பெற்று வருகின்றன.

    தற்போது இந்த பகுதி குளங்கள் நிரம்பியுள்ளன. மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்னும் சில தினங்களில் அனைத்து குளங்களும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிற்றாற்றில் மேலப்பாவூருக்கு மேற்கே உள்ள தடுப்பு அணையிலிருந்து மேலப்பாவூர் குளத்திற்கும் கீழப்பாவூர் பெரிய குளத்திற்கும் தண்ணீர் வருகிறது. இந்த இரண்டு குளங்களும் பெருகிய பின்பு மருகால் வழியாக இதனை தொடர்ந்து நாகல்குளம், கடம்பன்குளம், தன்பத்து குளம், பூலாங்குளம், சின்னபூலாங்குளம், கோயிலுற்று குளம், ஆண்டிபட்டிகுளம் ஆகிய குளங்கள் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் இங்கிருந்து தொட்டியான் கால்வாய் மூலம் ஆலங்குளம் தொட்டியான் குளம் உட்பட 18க்கும் மேற்பட்ட குளங்களுக்கு கீழப்பாவூர் குளத்திலிருந்து வரும் தண்ணீர் தான் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதன் மூலம் பலஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேலப்பாவூர்குளம் மற்றும் கீழப்பாவூர் பெரிய குளம் முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2518 குளங்கள் உள்ளன. இதில் 1221 குளங்கள் கால்வரத்து குளங்களும், 1297 குளங்கள் மானாவாரி குளங்களும் ஆகும். தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, சிவகிரி, களக்காடு, கடையம், அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு, அடவிநயினார், குண்டாறு ஆகிய 8 அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதன் காரணமாக தற்போது நெல்லை மாவட்டத்தில் சுமார் 150 குளங்கள் வரை நிரம்பி உள்ளது. மேலும் 500 குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பெரியகுளங்களில் 2 மாதத்திற்கு போதுமான தண்ணீரும், சிறிய குளங்களில் 1 மாதத்திற்கு போதுமான தண்ணீரும் உள்ளது‘ என்றார். #NellaiRain
    ×