search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூபுர் சர்மா"

    • நூபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • பாஜக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நூபுர் சர்மா கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்ட செய்யப்பட்டார்

    புதுடெல்லி:

    நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நூபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக்கோரி நூபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, நூபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.

    நபிகள் நாயகம் குறித்த பேச்சு சர்ச்சையாகி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நூபுர் சர்மா கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்ட செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நூபுர் சர்மா தனது கருத்துக்கு தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • இன்று அதிகாலை போலீசார் மதகுரு சல்மான் சிஷ்டியை கைது செய்தனர்.

    அஜ்மீர்:

    டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா கடந்த மாதம் இறைதூதர் நபிகள் நாயகத்திற்கு எதிராக தெரிவித்த கருத்து விமர்சனம், சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை எதிர்த்து நாடு முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

    அவரை கண்டித்து பல்வேறு நகரங்களில் போராட்டங்களும் நடந்தன. நூபுர் சர்மா தனது கருத்துக்கு தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்கா மதகுரு சல்மான் சிஷ்டி நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மாவை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர், "நூபுர் சர்மாவின் தலையை துண்டித்து என்னிடம் கொண்டு வருபவர்களுக்கு என் வீட்டை பரிசாக கொடுப்பேன்" என்று கூறி இருந்தார்.

    இந்த வீடியோ நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடினார்கள். அப்போது அவர் தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

    அவரை பிடிக்க தனிப்படைகள் உருவாக்கப்பட்டன. விசாரணையில் அவர் பதுங்கியிருந்த இடம் போலீசாருக்கு தெரிய வந்தது. இன்று அதிகாலை 2 மணி அளவில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து மதகுரு சல்மான் சிஷ்டியை கைது செய்தனர்.

    பிறகு அவரை ஆள்வார் கேட் போலீசார் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே அஜ்மீர் தர்கா நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மதகுரு சல்மான் சிஷ்டியின் கருத்துக்கும், தர்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளனர். அந்த வீடியோவில் சல்மான் சிஷ்டி போதையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

    மது அருந்திவிட்டு அவர் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

    • பாஜக சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்துகிறது.
    • நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு எனது நாட்டை பிளவுபடுத்துகிறது.

    கொல்கத்தா :

    நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்து பாஜகவின் பிளவுப்படுத்தும் கொள்கையை மேலும் மேம்படுத்துவதற்கான சதி என மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார். கொல்கத்தாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசினார்.அதில் அவர் கூறியதாவது,

    "நூபுர் சர்மா சர்ச்சை முற்றிலும் ஒரு சதி...வெறுப்பு மற்றும் பாஜகவின் பிளவுபடுத்தும் கொள்கை. நூபுர் சர்மா ஏன் கைது செய்யப்படவில்லை. நூபுர் சர்மாவை கைது செய்யுங்கள் ஏனென்றால் உங்களால் நெருப்புடன் விளையாட முடியாது.

    நமது நாட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். நீங்கள் மக்களை நம்பவில்லை என்றால், உங்களை எப்படி நம்புவீர்கள்? நான் இந்துக்கள், முஸ்லிம்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்கள் என அனைத்து சமூகத்தினருக்காகவும் இருக்கிறேன்.

    பாஜக சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்துகிறது. அவர்கள் போலியான செய்திகள் மற்றும் வகுப்புவாத வீடியோக்களை பரப்பி விட பணம் கொடுக்கிறார்கள். அவ்வாறு பணம் பெறும் பல ஊடகங்கள் உள்ளன. நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு எனது நாட்டை பிளவுபடுத்துகிறது மற்றும் எங்கள் நாட்டின் நற்பெயரை பாதிக்கிறது.

    ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக எனது நாடு மற்றவர்களுக்கு பணிந்து செல்வதை என்னால் பார்க்க முடியவில்லை. மேலும், சில நாடுகள் நமது பொருட்களை புறக்கணித்துள்ளன. இது வெட்கக்கேடான விஷயம்"

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பலமுறை காவல்துறை வலியுறுத்தியும் நூபுர் சர்மா விசாரணைக்கு ஆஜராகவில்லை.
    • அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் நூபுர் சர்மா மனு.

    கொல்கத்தா:

    தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா இறைதூதர் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. கட்சி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், நூபுர் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் மற்றும் நர்கெல்டங்கா காவல் நிலையங்களில் நூபுர் சர்மா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவருக்கு பலமுறை காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    குற்ற வழக்கில் தேடப்படும் நபர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் காவல்துறையினரால் சுற்றறிக்கை வெளியிடுவது வழக்கம். அதன் அடிப்படையில் நூபுர் சர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை லுக் அவுட்  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக தம் மீது பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நூபுர் சர்மா பங்கேற்ற தொலைக்காட்சி விவாதத்தை நாங்கள் பார்த்தோம். அவரது வாதம் பொறுப்பற்ற வகையில் இருந்தது.
    • நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அது தொடர்பாக நூபுர் சர்மா எப்படி பேச முடியும்?

    புதுடெல்லி:

    தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா இறைதூதர் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

    முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நூபுர் சர்மாவை கட்சி பதவியில் இருந்து பா.ஜனதா நீக்கியது.

    இதற்கிடையே நூபுர் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நூபுர் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.

    அவர் தனது மனுவில் வழக்கு விசாரணைக்காக வெளி மாநிலங்களுக்கு சென்றால் அது தனக்கு பாதுகாப்பாக இருக்காது என்று தெரிவித்திருந்தார். அவரது மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சூரியகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது நீதிபதி சூர்யகாந்த் கருத்து தெரிவிக்கும்போது நூபுர் சர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    நூபுர் சர்மா பங்கேற்ற தொலைக்காட்சி விவாதத்தை நாங்கள் பார்த்தோம். அவரது வாதம் பொறுப்பற்ற வகையில் இருந்தது. அதன்பிறகு அவர் நடந்துகொண்ட விதமும் வெட்கக்கேடாக காணப்பட்டது.

    அவரது வக்கீல்களும் அவருக்கு ஆதரவாக செயல்படுவது வெட்கக்கேடானது. நூபுர் சர்மா தனக்கு எதிராக செயல்படுவதாக போலீசில் புகார் கொடுத்ததும், ஒருவரை கைது செய்தனர்.

    ஆனால் நாடு முழுவதும் அவருக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. என்றாலும் டெல்லி போலீசார் இன்னமும் அவரை கைது செய்யவில்லை.

    உதய்பூரில் நடந்த கொலைக்கு நூபுர் சர்மாவின் பொறுப்பற்ற பேச்சுதான் காரணம். அவரது செயல்பாடுகளால் நாட்டில் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவரது தொலைக்காட்சி விவாதம் கண்டனத்துக்குரியது.

    நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அது தொடர்பாக நூபுர் சர்மா எப்படி பேச முடியும்? அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

    ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதால் அவர் எதையும் பேசிவிட முடியாது. அவருக்கு அந்த அதிகாரமும் இல்லை. ஜனநாயகம் எல்லோருக்கும் பேச்சுரிமை வழங்கியுள்ளது. ஆனால் அந்த உரிமையை தவறாக பயன்படுத்தக்கூடாது.

    ஜனநாயக வரம்பை மீற இந்த கோர்ட்டு அனுமதிக்க முடியாது. சர்ச்சை ஏற்பட்டதும் அவர் தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக சொல்வது மிக மிக தாமதமான முடிவாகும். நாட்டு மக்களின் உணர்வை நூபுர் சர்மா கண்டுகொள்ளாமல் புறம் தள்ளியுள்ளார்.

    நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு நூபுர் சர்மா தனிப்பட்ட முறையில் பொறுப்பு ஏற்க வேண்டும். நாடு முழுவதும் அவர் மீது பதிவான வழக்குகள் கவனத்தில் கொள்ளப்படும். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.

    ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் நூபுர் சர்மா முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். தொலைக்காட்சியில் நேரில் தோன்றி அவர் மன்னிப்பு கேட்பதுதான் நல்லது.

    இவ்வாறு நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.

    பொதுவாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டனம் தெரிவிப்பது இல்லை. ஆனால் நூபுர் சர்மா வழக்கு விவகாரத்தில் கடுமையான வார்த்தைகளை நீதிபதி பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கோர்ட்டில் வழக்கு இருப்பதால் நூபுர் சர்மாவின் பெயர் தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.
    • தீர்மானத்தைக் கண்டித்து மேற்கு வங்காள பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    கொல்கத்தா:

    பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நூபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன் ஜிண்டால் கருத்து வெளியிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சர்ச்சைக்குரிய பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீதும் கட்சி மேலிடம் நடவடிகை எடுத்துள்ளது. நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவைக் கண்டித்து மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை சட்டசபை விவகார மந்திரி பார்த்தா சட்டர்ஜி தாக்கல் செய்தார்.

    அப்போது பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சில தலைவர்கள் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதங்களுக்கிடையே வெறுப்பை பரப்பும் மிகப்பெரிய சதியில் இது ஓர் அங்கம் என தெரிவித்தார்.

    ×