search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நூபுர் சர்மாவுக்கு எதிரான வழக்குகள் டெல்லிக்கு மாற்றம்... உச்ச நீதிமன்றம் உத்தரவு
    X

    நூபுர் சர்மாவுக்கு எதிரான வழக்குகள் டெல்லிக்கு மாற்றம்... உச்ச நீதிமன்றம் உத்தரவு

    • நூபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • பாஜக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நூபுர் சர்மா கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்ட செய்யப்பட்டார்

    புதுடெல்லி:

    நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நூபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக்கோரி நூபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, நூபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.

    நபிகள் நாயகம் குறித்த பேச்சு சர்ச்சையாகி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நூபுர் சர்மா கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்ட செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×