என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Look Out Circular"

    • குறுகிய காலத்தில் பைஜூ'ஸ் $20 பில்லியன் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது
    • அயல்நாடுகளுக்கு தப்ப முடியாதவாறு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

    கேரளாவை சேர்ந்த பொறியாளரான ரவீந்திரன் (44) என்பவரால் தொடங்கப்பட்ட இணையதள வழியாக கல்வி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம், பைஜூ'ஸ் (Byju's).

    குறுகிய காலத்தில் பைஜூ'ஸ் நிறுவனம் வளர்ச்சியடைந்து $20 பில்லியன் எனும் அளவில் சந்தையில் மதிப்பிடப்பட்டது.

    கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் காரணமாக பல குழந்தைகளுக்கு இணையவழி கல்வி ஒரு விருப்பமான மாற்றாக இருந்து வந்தது. அப்போது பைஜூ'ஸ் பெரும் வருவாய் ஈட்டியது.

    ஆனால், கோவிட் பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு கல்லூரிகளும், பள்ளிகளும் திறக்கப்பட்டதால், இணைய வழிமுறையில் கல்வி பயில பலர் ஆர்வம் காட்டவில்லை.

    போதிய வருவாய் இல்லாததால், பைஜூ'ஸ், இணையவழி பயிற்சியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் தள்ளப்பட்டது.


    பைஜூ'ஸ் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

    இதனால், இந்நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

    இந்நிலையில், அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றதில், அந்நிய செலாவணி மேம்பாட்டு சட்டத்தின்படி (FEMA), சுமார் ரூ. 9,362 கோடி அளவிற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக  ரவீந்திரன் மீது அமலாக்கத் துறை (Enforcement Directorate) குற்றம் சாட்டியது.

    இதன் தொடர்ச்சியாக , ரவீந்திரன் இந்தியாவை விட்டு வெளியேற சாத்தியம் உள்ளதால், அவர் அயல்நாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அமலாக்கத் துறையின் பெங்களூரூ அலுவலகம் "லுக் அவுட்" (Look Out) சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ரவீந்திரன் தடுத்து நிறுத்தப்படுவார்.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பைஜூ'ஸ் நிறுவனருக்கு இது மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    • பலமுறை காவல்துறை வலியுறுத்தியும் நூபுர் சர்மா விசாரணைக்கு ஆஜராகவில்லை.
    • அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் நூபுர் சர்மா மனு.

    கொல்கத்தா:

    தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா இறைதூதர் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. கட்சி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், நூபுர் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் மற்றும் நர்கெல்டங்கா காவல் நிலையங்களில் நூபுர் சர்மா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவருக்கு பலமுறை காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    குற்ற வழக்கில் தேடப்படும் நபர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் காவல்துறையினரால் சுற்றறிக்கை வெளியிடுவது வழக்கம். அதன் அடிப்படையில் நூபுர் சர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை லுக் அவுட்  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக தம் மீது பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிபிஐ பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #KartiChidambaram
    சென்னை:

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்கும் விதமாக கடந்தாண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி அவரது தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.

    இதற்கிடையே, கோர்ட் அனுமதியுடன் அவர் சில முறை வெளிநாட்டுக்கு சென்று வந்தார். இந்நிலையில், அவரது மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், சிபிஐ பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டனர். எனினும், இந்த வழக்கில் மற்ற விசாரணைக்கு இந்த தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
    ×