search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்நிலை ஆக்கிரமிப்பு"

    • தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
    • நீர்வள ஆதாரத்துறை சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில மாதங்களாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட சுள்ளிக்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள 58 வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறை சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.

    இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றனர். இந்நிலையில் அப்பகுதியில் 8 வீட்டினர் மட்டும் பலமுறை கூறியும் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். இதையடுத்து நீர்வள துறை ஆய்வாளர் செல்வராஜ், திருமுருகன் பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், கிராம நிர்வாக அலுவலர் யுகேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் அனிதா ஆகியோர் முன்னிலையின் பொக்லைன் எந்திரம் மூலம் நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 8 வீடுகளை அகற்றினர். முன்னதாக வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் அகற்றி மாற்று இடங்களில் வைத்தனர்.  

    • குடியாத்தம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல
    • ஏரிக்கரையை பலப்படுத்தவும் தீர்மானம்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன், துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்திமுருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில் ராமாலை நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை, ராமாலைப் பகுதியில் புற காவல் நிலைய அமைக்க வேண்டும்,

    குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும், பல கிராமங்களில் டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது டவுன் பஸ் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    கூட நகரம் ஏரிக்கரை ஒரு பகுதியில் சாலை அமைக்காமல் உள்ளது உடனடியாக சீர் செய்து சாலை அமைக்க வேண்டும், கள்ளூர்மேடு பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும்,

    உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், கருணீகசமுத்திரம் ஏரி நிரம்பினால் ஊருக்குள் தண்ணீர் வருகிறது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், வளத்தூர் ஏரி நிரம்பி செல்லும்போது ஒரு சாலை துண்டிக்கப்படுகிறது உடனடியாக பாலம் வேண்டும்,

    முக்குன்றம் கிராமத்தில் உள்ள பள்ளியில் மழை காலங்களில் வகுப்பறைகளுக்குள் மழை நீர் ஒழுகுகிறது மழை பெய்தால் விடுமுறை அளிக்கப்படுகிறது உருண்டையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

    உறுப்பினர் இமகிரிபாபு பேசும்போது வள்ளலார் நகரில் தெருவின் நடுவே மூன்று மின்கம்பங்கள் உள்ளது இதனால் அப்பகுதியில் கார், ஆட்டோ செல்ல முடியவில்லை அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனம் வருவதற்கு வழியில்லை, மூன்று மின்கம்பங்களை அப்புறப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

    இதனையடுத்து மின்கம்பங்களை அகற்ற தனது சொந்த பணத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அகற்றப்படவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

    இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ராமாலை பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் தீர்மானங்களை கொண்டு வந்தார் அதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் குடியாத்தம் ஒன்றியத்தில் பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து பாலங்கள் துண்டிக்கப்பட்டு சாலைகள் பழுதடைந்தது அதை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பழுதடைந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அதனை தடுக்கும் பொருட்டு 3 ஆயிரத்து 800 மீட்டர் நீளமுள்ள ஏரிக்கரையை பலப்படுத்தி நடைப்பாதை அமைக்க வேண்டும், சீவூர்-மூங்கப்பட்டு இடையே பழுதடைந்த பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மனோகரன், குட்டி வெங்கடேசன், சுரேஷ்குமார், தியாகராஜன், ரஞ்சித் குமார், சரவணன், தீபிகா உள்பட பலர் பேசினார்கள்.

    • கலெக்டர் முருகேஷ் உத்தரவு
    • திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 37 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    நீர் நிலை ஆக்கிரமிப்பு

    இதில் பல்வேறு அரசு துறை அலுவலர்களும் புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட 37 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது :-

    பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2016-17 முதல் 2021-22 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த வீடுகள் எண்ணிக்கை 2462 இதற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.59.08 கோடி ஆகும். பயனாளிகளால் முடிக்கப்பட்ட வீடுகள் எண்ணிக்கை 1082 இதற்கான மொத்த தொகை ரூ.25.96 கோடி சம்மந்தப்பட்ட பயனாளிகள் வங்கி கணக்கில் ஈடு செய்யப்பட்டது.

    அகற்ற உத்தரவு

    தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் நிலுவையில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 1375 இதற்கான தொகை ரூ.33.00 கோடி ஆகும். மேலும், 2020-21 ஆம் ஆண்டு பசுமை வீடு திட்டத்தின் கீழ் மொத்த வீடுகள் 62, மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.1.63 கோடி ஆகும். பயனாளிகளால் முடிக்கப்பட்ட வீடுகள் 46, இதற்கான மொத்த தொகை ரூ.1.16 கோடி சம்மந்தப்பட்ட பயனாளிகள் வங்கி கணக்கில் ஈடு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள வீடுகள் 16 ஆகும்.

    இதற்கான மதிப்பீட்டு தொகை ரூ.47.10 லட்சம் ஆகும். நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிக்கவும் கட்ட இயலாத பயனாளிகளை கண்டறிந்து ஊராட்சி மன்ற தலைவர் மூலமாகவும் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் கட்டி முடிக்க அறிவுறுத்தினார்.

    மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிசை வீடு கணக்கெடுப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், 14 - வது மற்றும் 15 - வது நிதிக்குழு மான்ய திட்டப்பணிகள், தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக்கழிப்பறைகள், பொது சுகாதார வளாகம் அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (ஊ.வ) ராமகிருஷ்ணன் உதவி இயக்குநர் (ஊராட்சி) சரண்யாதேவி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×