search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி விரதம்"

    • அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும்.
    • பத்தாம் நாளில் சிவ சக்தி ஐக்கிய ரூபிணியாகவும் வழிபடுதல் வேண்டும்.

    அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும்.

    புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்கள்

    நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    நவராத்திரி முதல் மூன்று தினங்கள் துர்க்கைக்கு உரியதாகும். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கு உரியதாகும்.

    இறுதி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கு உரியதாகும்.

    நவராத்திரி ஒன்பது தினங்களிலும் அம்பாள் ஒன்பது வகையான திருக்கோலங்களுடன் ஆராதிக்கப் பெறுகிறாள்.

    முதல் நாளில் மூன்று வயதுள்ள பாலையாகவும், இரண்டாம் நாளில் ஒன்பது வயதுள்ள குமாரியாகவும்,

    மூன்றாம் நாளில் பதினைந்து வயதுள்ள தருணியாகவும், நான்காம் நாளில் பதினாறு வயதுள்ள சுமங்கலியாகவும்,

    ஐந்தாம் நாளில் ரூபிணியாகவும், ஆறாம் நாளில் ஸ்ரீவித்யா ரூபிணியாகவும், ஏழாம் நாளில் மகா துர்க்கையாகவும்,

    எட்டாம் நாளில் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாளில் சும்பன், நிசும்பனைக் கொன்ற சரஸ்வதி தேவியாகவும்,

    பத்தாம் நாளில் சிவ சக்தி ஐக்கிய ரூபிணியாகவும் வழிபடுதல் வேண்டும்.

    நவராத்திரியில் கோவிலில் விசேஷ பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், அலங்காரங்கள் யாவும் நடைபெறும்.

    இல்லங்களிலும் கொலு வைத்துக் கொண்டாடுவார்கள்.

    நவராத்திரியில் கன்னிகை பூஜை, சுமங்கலி பூஜை ஆகியவை மிகப் பிரதானமானவையாகும்.

    நவராத்திரியாகிய ஒன்பது தினங்களிலும் இல்லங்களுக்கு வரும் பெண்களுக்கு நீராடுவதற்காக பச்சிலை,

    பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், கோரோஜனம், காசுகட்டி, எண்ணெய், மஞ்சள், குங்குமம்,

    பன்னீர், சந்தனம், மருதோன்றி ஆகியவைகளை கொடுக்கலாம்.

    ஒன்பது நாட்களும் பூஜை நடத்த இயலாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்களிலாவது

    பூஜையை செய்தால் ஒன்பது நாள் விரதப் பலனும் உண்டு.

    அஷ்டமி ஒரு நாளாவது அவசியம் பூஜை செய்தாலும் நவராத்திரி விரதப் பலன் உண்டு.

    கலைக்கும், பொருளுக்கும், சக்திக்கும் இந்த ஒன்பது நாட்களும் அம்பாளை பிரார்த்தனை, பாராயணம் செய்தால்

    அவள் இம்மூன்று பலன்களையும் முச்சக்திகளின் உருவெடுத்து நமக்கு தருவாள்.

    ×