search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு"

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைதான் நேர்மையாக இருக்கும் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி கூறியதாவது:-

    தூத்துக்குடி சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே ஒரு தனிப்பட்ட அமைப்பு விசாரித்தால்தான் விசாரணை நேர்மையாக நடைபெறும்.

    இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? குட்கா விவகாரத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு இருந்ததால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்தேன். இதில் போலீசார், அரசியல்வாதிகள் என யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று கூறினார்.

    இந்த வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் வருகிற ஜூலை 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்காத பலியானவர்களின் உறவினர்கள் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியை அணுகி பெற்று கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring

    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்ட மீனவ கிராமமான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட10 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் கடலுக்கு செல்லவில்லை. #SterliteProtest
    திசையன்விளை:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தவர்கள் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க சென்றனர்.

    இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேரி பலியாகினர். இதை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் சேர்ந்த 7 ஆயிரம் சாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளாக தொடர்ந்து இன்றும் அவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் நெல்லை மாவட்ட மீனவ கிராமமான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட10 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையில் 2 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உவரி கடற்கரையில் மட்டும் 200 நாட்டு படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. #SterliteProtest
    குமரி மாவட்டத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த துணைநின்ற மாவட்ட கலெக்டர், மற்றும் துப்பாக்கியால் சுட்ட காவல்துறையினருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.#SterliteProtest
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது.

    குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், குமரி மாவட்ட திருவருட்பேரவை பொதுச்செயலாளர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் உள்பட பலர் தூத்துக்குடி பிரச்சினை தொடர்பாக, குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுப்புகையினால் சுற்றுச்சூழல் மாசுபட்டு புற்றுநோய் போன்ற பல்வேறு உயிர்கொல்லும் நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிர்களை பலி கொடுத்து வரும் மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் 100-வது நாளில் நீதி கேட்டு பேரணியாகச் சென்ற வேளையில் காவல்துறை அத்துமீறி, வன்முறைத் தாக்குதல் நடத்தி எந்தவித முன் எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். சுமார் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காவல்துறையின் இந்த வன்முறைத் தாக்குதல் மனிதநேயமுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

    கொல்லப்பட்டவர்கள், காயம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமூக நீதி அடிப்படையில் தகுந்த இழப்பீட்டு தொகை மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கிட வேண்டும். வேறு பல மாநிலங்களில் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் கால் பதித்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படவேண்டும்.

    துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் முரட்டுத்தனமாக துப்பாக்கி சூடு நடத்த துணைநின்ற மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் துப்பாக்கியால் சுட்ட காவல்துறை வீரர்கள் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். காணாமல் போன மக்களைக் கண்டறிந்து அவர்களை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ், குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ராஜ், குமரி மாவட்ட திருவருட்பேரவை ஒருங்கிணைப்பாளர் மரியவின்சென்ட், மரியவிக்டர், பங்கிராஸ், ஸ்டீபன், அகமது உசேன் ஆகியோர் உடன் சென்றனர். #SterliteProtest
    ×