search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவனந்தபுரம் தொகுதி"

    • கேரள தேர்தலில் இடது சாரி ஜனதாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனதாயக முன்னணி இடையே தான் போட்டி உள்ளது.
    • மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான சசி தரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்றும் 12 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில ஈடுபட்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் மக்களவை தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கேரள தேர்தலில் இடது சாரி ஜனதாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனதாயக முன்னணி இடையே தான் போட்டி உள்ளது. வருகிற மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நான் போட்டியிடுவதே இறுதியாகும். இனி மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • சசிதரூர் ரூ.49.3 கோடி அசையும் சொத்துகளும், ரூ.6.75 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார்.
    • ரூ.2 கோடி மதிப்பிலான அமெரிக்க முதலீடுகள், ரூ.1.1 கோடிக்கான அமெரிக்க கடன்களையும் குறிப்பிட்டு இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களையும் வெளியிட்டு இருந்தார். அதில் ரூ.49.3 கோடி அசையும் சொத்துகளும், ரூ.6.75 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார். இதில் முக்கியமாக ரூ.5,11,314 மதிப்பிலான பிட்காயின் இருப்பதாக கூறியுள்ளார்.

    மேலும் ரூ.2 கோடி மதிப்பிலான அமெரிக்க முதலீடுகள், ரூ.1.1 கோடிக்கான அமெரிக்க கடன்களையும் குறிப்பிட்டு இருந்தார். இவற்றை தவிர ரூ.9.33 கோடி பங்கு முதலீடுகள், ரூ.3.46 கோடி கார்பரேட் பத்திரங்கள், ரூ.91.7 லட்சம் டெபாசிட் ஆவணங்கள், ரூ.36 ஆயிரம் கையிருப்பு போன்றவையும் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • நடிகை ஷோபனா வருங்கால அரசியல்வாதி. மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும்.
    • பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமையும், நானும் இது தொடர்பாக அவருடன் பேசினோம்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடிகை ஷோபனா, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நடிகை ஷோபனா போட்டியிடவேண்டும் என்று நடிகர் சுரேஷ்கோபி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகை ஷோபனா வருங்கால அரசியல்வாதி. மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும். அவர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்பதே எனது விருப்பம். பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமையும், நானும் இது தொடர்பாக அவருடன் பேசினோம்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ×