search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி திருக்குடை"

    • புரட்டாசி மாதம் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஊர்வலத்தில் 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று சமர்ப்பிப்பது வழக்கம்.
    • திருக்குடை ஊர்வலம் வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலமாக புறப்படுகிறது.

    அம்பத்தூர்:

    அயனாவரம் திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளையும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஊர்வலத்தில் 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று சமர்ப்பிப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் சிறப்பு பூஜைகளுடன் 21 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த திருக்குடை ஊர்வலம் வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலமாக புறப்படுகிறது. ஊர்வலத்துக்கு மாநில விஷ்வ இந்து பரிஷத் தலைவர் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்குகிறார். திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் வரவேற்கிறார்.

    விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத வழக்கறிஞர் பிரிவு சு.சீனிவாசன் முன்னிலை வகிக்கிறார். திருக்குடை ஊர்வலத்தை அகில பாரத சன்னியாசிகள் சங்க அறங்காவலர் சுவாமி ஈஸ்வரானந்தா ஆசியுரையுடன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் அறங்காவலர்கள் தணிகை வேல், எஸ். சீனிவாசன் உட்பட திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    திருக்குடை ஊர்வலமானது என்.எஸ்.சி.போஸ் ரோடு, வால்டாக்ஸ் ரோடு, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, ஸ்டாரன்ஸ் ரோடு, கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்று இரவு அயனாவரத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் சிவசக்தி சத்சங் மண்டபத்தில் தங்குகிறது.

    • 11 வெண்பட்டு குடைகளை ஏழுமலையானுக்கு கடந்த 18 ஆண்டுகளாக சமர்ப்பித்து வருகிறது.
    • எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கப்பட உள்ள திருக்குடைகள் சென்னையில் இருந்து நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னையில் ஊர்வலம் செல்லும் பாதை முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது.

    திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தில் தமிழக பக்தர்களின் சார்பில் இந்து தர்மார்த்த சமிதி, 11 வெண்பட்டு குடைகளை ஏழுமலையானுக்கு கடந்த 18 ஆண்டுகளாக சமர்ப்பித்து வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான, திருப்பதி திருக்குடைகள் உபய உற்சவம் தொடக்க விழா சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் நேற்று தொடங்கியது.

    நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வரவேற்று பேசினார்.

    விசாகா ஸ்ரீ சாரதா பீடம் உத்தர மடாதிபதி ஸ்ரீ ஸ்வாத்மானந்தேந்த்ர சரஸ்வதி சுவாமி அருளாசி வழங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் விசுவ இந்து பரிசத், தமிழ்நாடு நிறுவனரும், இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான வேதாந்தம், விசுவ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் கிரிஜா சேஷாத்ரி மற்றும் கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்டோர் பேசினர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர்ரெட்டி கலந்து கொண்டார். திருமலை-திருப்பதி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சிறுவாபுரி முருகன் கோவிலில் இருந்து பிரசாதம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க 11 வெண்பட்டு குடைகளும் ஊர்வலமாக மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டன. குறிப்பாக பூக்கடை பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் 11 குடைகள் ஆடி அசைந்து வந்த காட்சி பக்தர்களை பெரிதும் கவர்ந்தது. இவைதவிர பெருமாளின் பொற்பாதங்கள், தசாவதார உற்சவர் சிலைகள், ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடேச பெருமாள் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பவனி வந்தன. ஊர்வலம் சென்ற பாதை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

    பிற்பகல் 12.30 மணிக்கு பைராகி மடத்துக்கு குடைகள் கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு வழியாக பைராகி மடத்தை அடைந்தது. தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை வழியாக ஊர்வலமாக குடைகள் கொண்டு செல்லப்பட்டன. செல்லும் வழியெல்லாம் பக்தர்கள் குடும்பத்துடன், திருக்குடைகளை தரிசித்து, அவற்றின் மீது பூக்களையும், மாலைகளையும் வீசி வணங்கி, பிரார்த்தனை செய்தனர். வால்டாக்ஸ் சாலை வழியாக இரவு திருக்குடைகள் கவுனி தாண்டின.

    தொடர்ந்து வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி வழியாக திருவள்ளூர் சென்று அங்கிருந்து திருப்பாச்சூர் வழியாக திச்சானூர் சென்றடைகிறது. வருகிற 30-ந் தேதி திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கலப்பொருட்களுடன் திருப்பதி ஜீயர் முன்னிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

    • வட சென்னைப் பகுதியில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நாளை நடக்கிறது.
    • இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    சென்னை :

    சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வட சென்னைப் பகுதியில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வதால், வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் நிகழ்ச்சி முடியும் வரை வட சென்னைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதன்படி நாளை காலை 8 மணி முதல் ஊர்வலம் வால் டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை,அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த சாலைகளில் பயணிக்க வேண்டிய வாகனங்கள், ஈ.வெ.ரா. பெரியார் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

    மாலை 3 மணி முதல் ஊர்வலம் பேசின் பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை,அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த வழித்தடங்களில் செல்ல வேண்டிய வாகனங்கள், பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை,ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். ஊர்வலம் மூலகொத்தலம் பகுதியை அடைந்த உடன் பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    ஊர்வலம் பேசின்பாலம் சாலையில் செல்லும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் செல்லும் போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள், வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் செல்லும்போது நாராயண குரு சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    அவதான பாப்பையா சாலையில் ஊர்வலம் செல்லும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.

    ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செல்லும்போது, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் நாராயணகுரு சாலை வழியாக செல்லலாம்.

    ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    இதேபோல ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் செல்லும் போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.

    ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தை அடையும்போது, ஒட்டேரி சந்திப்பு, மேடவாக்கம் குளம் சாலையில் இருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள், ஒட்டேரி சந்திப்பில் இருந்து குக்ஸ் சாலைவழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையில் இருந்து வி.பி காலனி தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகவும் செல்லலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×