என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பதி திருக்குடை ஊர்வலம்"
- சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு வழியாக சென்றது.
- 11 வெண்பட்டு திருக்குடைகள் அணிவகுத்து வந்ததை பார்த்து பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என்று பக்தி கோஷமிட்டனர்.
இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடைகளை எடுத்துச் சென்று உபயமாக வழங்குவது நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் இன்று 21-வது ஆண்டாக திருப்பதி திருக்குடை உபய உற்சவம் சென்னை பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் பூஜையுடன் நடந்தது.
உடுப்பு ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யா தீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து திருப்பதி குடை ஊர்வலம் தொடங்கியது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் 11 வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி, விசுவ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர். செல்லமுத்து, பொதுச்செயலாளர் எஸ். சோம சுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.

சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு வழியாக சென்றது.
திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை வழிநெடுக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர். 11 வெண்பட்டு திருக்குடைகள் அணிவகுத்து வந்ததை பார்த்து பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என்று பக்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து பைராகி மடம் வழியாக திருக்குடை ஊர்வலம் சென்றது. இதன் காரணமாக இன்று காலை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து வேறு வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
திருப்பதி திருக்குடைகள் இன்று பிற்பகல் கவுனி தாண்டுகிறது. இதனால் வடசென்னையில் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருக்குடைகள் கவுனி தாண்டிய பிறகு சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, வடமலை தெரு, தானா தெரு சந்திப்பு, செல்லப்பா தெரு, ஓட்டேரி பாலம் வழியாக கொன்னுார் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைகிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வழியாக, வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் சென்றடைந்து, இரவு தங்குகிறது.
24-ந்தேதி (புதன்கிழமை) பாடி, அம்பத்துார் எஸ்டேட், முகப்பேர், அம்பத்துார், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்குகிறது. 25-ந்தேதி (வியாழக்கிழமை) ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வழியாக, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சென்றடைந்து இரவு தங்குகிறது. 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) திருமலை செல்லும் திருக்குடைகள், மாலை 3 மணிக்கு மாடவீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.
5 நாட்கள் பயணம் செய்யும் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த திருக்குடை ஊர்வலம் தென் இந்தியாவின் மிக பிரமாண்டமான திருக்குடை ஊர்வலமாக மாறி உள்ளது.
- இந்த ஆண்டுக்கான திருக்குடை ஊர்வலம் சென்னையில் இன்று நடைபெற்றது.
- பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நடக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட்- விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு சார்பில் அழகிய வெண்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருக்குடை ஊர்வலம் சென்னையில் இன்று நடைபெற்றது. பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தார்.
விஷ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு மாநில தலைவர் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் அகில பாரத வழக்கறிஞர் பிரிவு சீனிவாசன், மாநில செயலாளர் பாலமணிமாறன், மாநில துணைத்தலைவர் பத்ரி நாராயணன், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் ரமேஷ்குமார் சோப்ரா, வி.எச்.பி பொருளாளர் தணிகைவேல், தாமோதரன், பிரச்சார அமைப்பாளர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிவசபா ஆசிரமம் நிர்வாகி அன்னை ஞானேஸ்வரி கிரி.
திரைப்பட நடிகர் ரஞ்சித், ஆர்.எஸ்.எஸ்.மாநில செயலாளர் வி.ஜெ.ஜெகதீசன், மாநில அமைப்பாளர் ஆத்தூர் வெ.பாலாஜி, அமைப்பு செயலாளர் எஸ்.வி.ராமன், திரைப்பட நடிகர் எஸ்.ராஜா, வி.எச்.பி அறங்காவலர் ஜி.மணிகண்டன், திருச்சி சாரதாஸ் எம்.ரோஷன், திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் அறங்காவலர்கள் தணிகைவேல் எஸ்.சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த 21 அழகிய திருக்குடைகள் பொதுமக்கள் பக்தர்கள் வழிபாடுகளுடன் ஊர்வலமாக சென்று 21-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோவிலிலும் மாலை 4 மணி அளவில் திருப்பதி திருமலையில் தேவஸ்தான அதிகாரிகளிடமும் தமிழக மக்கள் பிரார்த்தனைகளுடன் சமர்ப்பிக்கப்படுவதாக திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் தெரிவித்தார்.
- தென் இந்தியாவின் மிகபிரமாண்டமான திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசிக்கின்றனர்.
- திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி பிரம்மோற்சவ காலத்தில், ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்து வருகிறது.
21-வது ஆண்டாக, இந்த ஆண்டும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.31 மணிக்கு, சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் ஊர்வலமாக சென்று, வரும் 27-ந்தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு திருமலையில், ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. தென் இந்தியாவின் மிகபிரமாண்டமான திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசிக்கின்றனர்.
22-ந்தேதி நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில், உடுப்பி ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சாமிகள் ஆசியுரை வழங்கி திருக்குடைகள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்ஜி, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர்.செல்லமுத்து, பொதுச்செயலாளர் எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.
அன்றைய தினம் திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று, மாலை 4 மணிக்கு திருக்குடைகள் கவுனி தாண்டுகிறது.
23-ந்தேதி ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வழியாக, வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் சென்றடைந்து, இரவு தங்குகிறது. 24-ந்தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்குகிறது.
25-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வழியாக, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சென்றடைகிறது. 26-ந்தேதி திருவள்ளூர் மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது. அங்கு பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்க்கப்படுகின்றன.
பின்னர், 27-ந்தேதி திருமலை செல்லும் திருக்குடைகள், மாலை 3 மணிக்கு மாடவீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.
திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது.
இவ்வாறு ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியுள்ளார்.
- அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருமலைக்கு சென்றடைகிறது.
- வருகிற 21-ந்தேதி திருக்குடைகள் திருமலையை சென்று அடைகிறது.
சென்னை:
திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவையின் போது, ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, தமிழக பக்தர்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஆண்டு தோறும் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது.
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். அதில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று 11 வெண் திருக்குடைகள்.
250 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாகச் எடுத்துச் செல்லப்படுகிறது.
அதன்படி ஏழுமலையான் கருடசேவைக்கு சென்னையில் இருந்து 11 வெண்பட்டு திருக்குடைகள் இன்று காலை சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மக்கள் நலமும், வளமும் பெறவும், விவசாயம் செழிக்கவும், நீர்வளம் பெருகவும் சங்கல்பம் செய்யப்பட்டது.
அதன் பின் மதியம் 12 மணிக்கு திருக்குடைகள் ஊர்வலத்தை ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோவில் மவுனகுரு பாலமுரு கனடிமை சுவாமிகள், கலவை கமலக்கண்ணியம்மன் கோவில் சச்சிதானந்தா சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் கொடி அசைத்தனர். திருக்குடை ஊர்வலத்தை காண அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். கோவிந்தா... கோவிந்தா என்ற பக்தி கோஷங்களுடன் திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு சென்றது.
என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று மாலை 4 மணிக்கு யானை கவுனி தாண்டுகிறது. பின்னர், யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி பிரிட்ஜ் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது. அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருமலைக்கு சென்றடைகிறது.
வருகிற 21-ந்தேதி திருக்குடைகள் திருமலையை சென்று அடைகிறது. அங்கு ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏழுமலையானுக்கு வஸ்திரம், மங்கலப்பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
- திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
- ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது.
சென்னை:
இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வெங்கடேசப் பெருமாள் கருட சேவைக்கு, தமிழ்நாட்டு பக்தர்கள் சார்பில், இந்து தர்மார்த்த சமிதி 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் ஆண்டுதோறும் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை, சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்ய உள்ளது.
சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில், 25-ந்தேதி காலை 10 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது.
தொடர்ந்து, திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி பிரிட்ஜ் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது.
மாலை 6 மணிக்கு சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, ஓட்டேரி, பொடிக்கடை வழியாக சென்று இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைகிறது. 26-ந்தேதி காலை 6 மணி, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம், பெரம்பூர் அகரம் சந்திப்பு திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் சென்றடைகிறது.
27-ந்தேதி காலை 6 மணிக்கு திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு பாடி, முகப்பேர், அம்பத்தூர், அத்திப்பட்டு, திருமுல்லைவாயல் சென்றடைகிறது. 28-ந்தேதி காலை 6 மணிக்கு, ஆவடி இந்துக்கல்லூரி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் வழியாக செல்கிறது. 29-ந்தேதி திருப்பாச்சூர் கனகம்மாசத்திரம் வழியாக கீழ் திருப்பதி செல்கிறது. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகிறது.
30-ந்தேதி திருக்குடைகள் திருமலை சென்றடையும். அதன்பின் திருமலை மாடவீதியில் திருக்குடைகள் வலம் வந்து வஸ்த்திரம் மற்றும் மங்கலப் பொருட்களுடன், திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருப்பதி திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது. திருக்குடை செல்லும் வழியில் தெருவிலோ, சமாஜங்களிலோ அல்லது கோவில்களிலோ பொதுவான பூஜைக்கு ஏற்பாடு செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
ஊர்வலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பஜனை, பிரபந்தக் குழுவினர் மற்றும் கலை நிகழ்ச்சிக் குழுக்கள் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். இதுகுறித்த விவரங்களுக்கு 7373099562, 7373099545 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






