என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தாஜ் மகால்
நீங்கள் தேடியது "தாஜ் மகால்"
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யப்படும் என உ.பி அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. #TajMahal #UttarPradesh #SupremeCourt
லக்னோ:
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனா நதிக்கரையில் உள்ளது. முகலாயர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.
ஆனால், தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநில அரசால் முறையாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாநில அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும், தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு இன்று தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தாஜ்மகாலை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருப்பதாகவும், இதன்மூலம் காற்று மற்றும் சத்தத்தினால் ஏற்படும் மாசுவை குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மிக முக்கியமாக, தாஜ்மகாலை சுற்றி உள்ள மாசுவை உண்டாக்கும் தொழிற்சாலைகளை மூட இருப்பதாகவும், அதற்கு பதிலாக சுற்றுலா மையம் அமைக்க இருப்பதாகவும் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TajMahal #UttarPradesh #SupremeCourt
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனா நதிக்கரையில் உள்ளது. முகலாயர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.
ஆனால், தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநில அரசால் முறையாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாநில அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும், தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு இன்று தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தாஜ்மகாலை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருப்பதாகவும், இதன்மூலம் காற்று மற்றும் சத்தத்தினால் ஏற்படும் மாசுவை குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மிக முக்கியமாக, தாஜ்மகாலை சுற்றி உள்ள மாசுவை உண்டாக்கும் தொழிற்சாலைகளை மூட இருப்பதாகவும், அதற்கு பதிலாக சுற்றுலா மையம் அமைக்க இருப்பதாகவும் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TajMahal #UttarPradesh #SupremeCourt
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலில் வெளியாட்கள் தொழுகை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.
லக்னோ :
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா பகுதிவாசிகளை தவிர வெளியாட்கள் யாரும் தாஜ் மகாலில் தொழுகை நடத்த கூடாது என ஆக்ரா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த தடையை எதிர்த்து தாஜ் மகால் மஸ்ஜித் மேலாண்மை குழுவை சேர்ந்த சையத் இப்ராகிம் ஹுசைன் சைதி என்பவர் கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்ராவில் வசிப்பவர்களை தவிர மற்ற பகுதியில் இருந்து சுற்றுலா வருபவர்கள் தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதி அளிக்க மறுத்தனர்.
மேலும், தாஜ் மகால் உலக அதிசங்களில் ஒன்று எனும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். தொழுகை நடத்த பல்வேறு இடங்கள் உள்ளன என கூறி ஹுசைன் சைதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா பகுதிவாசிகளை தவிர வெளியாட்கள் யாரும் தாஜ் மகாலில் தொழுகை நடத்த கூடாது என ஆக்ரா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த தடையை எதிர்த்து தாஜ் மகால் மஸ்ஜித் மேலாண்மை குழுவை சேர்ந்த சையத் இப்ராகிம் ஹுசைன் சைதி என்பவர் கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்ராவில் வசிப்பவர்களை தவிர மற்ற பகுதியில் இருந்து சுற்றுலா வருபவர்கள் தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதி அளிக்க மறுத்தனர்.
மேலும், தாஜ் மகால் உலக அதிசங்களில் ஒன்று எனும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். தொழுகை நடத்த பல்வேறு இடங்கள் உள்ளன என கூறி ஹுசைன் சைதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X