search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுக்க"

    • என்னுடைய பில் என்னுடைய அதிகாரம் என்கிற புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
    • ஜி.எஸ்.டி., பில்களை பதிவேற்றம் செய்வோர் குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்

    திருப்பூர்:

    நுகர்வோரிடம் வசூலிக்கும் வரி முறையாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், வரி ஏய்ப்புகளை குறைப்பதற்காகவும், மத்திய அரசு, மேரா பில் மேரா அதிகார் அதாவது என்னுடைய பில் என்னுடைய அதிகாரம் என்கிற புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இதற்காக பிளேஸ்டோர், ஆப்ஸ் ஸ்டோரில் பிரத்யேக செயலியும் பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மொபைல் செயலியில் நுகர்வோர், தங்கள் பெயர், மொபைல் எண்ணை அளித்து எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். பொருட்கள் வாங்கும் போது ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்ததற்கான பில்லை போட்டோ எடுத்து இந்த ஆப் ல் அப்லோட் செய்ய வேண்டும். ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் 25 பில்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.

    ஜி.எஸ்.டி., பில்களை பதிவேற்றம் செய்வோர் குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவி க்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமாக அசாம், ஹரியானா, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள், புதுச்சேரி, டாமன், டையு, தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பகுதிகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.திட்டம் துவங்கிய 51 நாட்களிலேயே இந்த செயலி மூலம் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 972 ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றம் செய்ய ப்பட்டுள்ளன.

    இம்மாதம் மட்டும் குஜராத்தில் 93,576, அசாம் - 15,850, ஹரியானா - 35,429, புதுச்சேரி - 8,677, டாமன், டையூ, தாத்ரா நகர் - 1,351 என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 883 ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து திருப்பூர் ஆடிட்டர்கள் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு தடுப்பதற்கான புதுமையான முயற்சியாக, மேரா பில் மேரா அதிகார் திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளது. வணிகர் வழங்கும் ஜி.எஸ்.டி., பில், இந்த திட்டத்தில் மொபைல் ஆப் வாயிலாக நுகர்வோரிடமிருந்து அரசுக்கு சென்றடைந்து விடும்.

    இதனால் குறிப்பிட்ட வணிகர் முறையாக வரி செலுத்துகிறாரா, வரி ஏய்ப்பு நடைபெறுகிறதா என்பதை சுலபமாக கண்டறிய முடியும். அதனடிப்படையில் வரி ஏய்ப்பு தடுப்பு, ஏய்ப்பு வரியை வசூலிப்பது போன்ற துறைசார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

    வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள அரசுக்கு வரி வருவாய் இன்றியமையாததாக உள்ளது. இந்த திட்டம் மூலம் தாங்கள் செலுத்தும் வரி, முறையாக அரசுக்கு சென்றடைய வேண்டும் என்கிற பொறுப்பு நுகர்வோர் மத்தியில் அதிகரிக்கும். திட்டம் நடைமுறையில் உள்ள 3 மாநிலங்களில் நுகர்வோர் ஆர்வமுடன் ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளதால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை மத்திய அரசு விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது
    • அடிக்கடி கபசுர குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும்

    தாராபுரம்

    தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், அதே போல தாங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் தொட்டிகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

    இதனால் வீட்டில் கொசு தொல்லையை ஒழிக்க முடியும், பாதுகாப்பான முறைகளை கடைபிடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுக்களை பாதிக்காமல் ஒவ்வொருவரும் தங்களை காத்து கொள்ள வேண்டும்.

    கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுர குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகள் அதிகமாக இருக்குமேயானால் உடனடியாக தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆட்கொல்லி காட்டு யானையை அட ர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் வரவ ழைக்கப்பட்டது.
    • இதைத் தொ டர்ந்து கும்கி யானைகளை பயன்படுத்தி ஆட்கொல்லி யானையை கண்காணித்து வரும் குழுவினருடன் ஆலோ சனை நடத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தர்மாபுரம் பகுதியில் தோட்டத்தில் காவலில் இருந்த விவசாயி மல்லப்பா என்பவரை மதித்துக் கொன்றது. அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுப ட்டதை அடுத்து விவசாய கொன்ற ஆட்கொல்லி காட்டு யானையை அட ர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் வரவ ழைக்கப்பட்டது.

    மேலும் அந்த ஆட்கொல்லி யானையை வனப்பகுதியை விட்டு வெளி–யேறாமல் தடுக்க இரியபுரம் வனப்ப–குதியில் இருந்து திகினாரை வரை 3.7 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே வெட்டப்பட்ட அகழியை பராமரித்து ஆழம் மற்றும் அகலப்படுத்த வனத்துறை திட்டமிட்டு தற்போது பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணியை ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்தி–ர–குமார்மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொ டர்ந்து கும்கி யானைகளை பயன்படுத்தி ஆட்கொல்லி யானையை கண்காணித்து வரும் குழுவினருடன் ஆலோ சனை நடத்தினார். அகழி பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்ப–ட்டுள்ளதா–கவும் தற்போது ஆட்கொல்லி யானை கோடம்பள்ளி வனப்பகுதிக்கு சென்று விட்டதாகவும் மீண்டும் ஊருக்குள் திரும்பி வராத வகையில் கும்கி யானைகள் மூலம் யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

    • வண்ண ஓவியங்கள் வரையும் பணி தொடக்கம்
    • கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக காட்சியளிக்கும்.

     கோவை:

    குப்பையை தரம் பிரித்து கொடுக்க வேண்டியதை மக்கள் மத்தியில் பதிய வைப்பத ற்காகவும், காந்திபுரம் மேம்பாலத்தின் தூண்களில் சுவரொட்டி ஒட்டுவதை தடுக்கும் முயற்சியாகவும் விழிப்புணர்வு ஓவியம் வரையும் திட்டத்தை, கோவை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.

    காந்திபுரம் கிராஸ்கட் ரோடு சந்திப்பில் உள்ள தூண் ஒன்றில், ஓவியம் வரையும் நிகழ்ச்சியை மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த பாலத்தில் ஒரே ஒரு தூணில் மட்டும் ஓவியம் வரைவதற்கு மாநகராட்சிக்கு, மாநில நெடுஞ்சாலை த்துறை அனுமதி அளித்துள்ளது. பாலம் தொடங்கும் இடத்தில் இருந்து நிறைவடையும் இடம் வரை அனைத்து தூண்களிலும் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது.

    இதனால் தூண்கள் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.திருச்சி ரோடு மேம் பாலத்தின் தூண்களில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரே ஓவியங்கள் வரைய முடிவு செய்துள்ளனர்.

    இதேபோல, காந்திபுரம் பாலம் உட்பட அனைத்துப் பாலங்களிலும் உள்ள சுவரொட்டிகளை அகற்றி, ஓவியங்கள் வரையும் பொறுப்பை, மாநகராட்சி அல்லது தன்னார்வ அமைப்பகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக காட்சியளிக்கும்.

    ×