search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதித்"

    • இன்று தமிழகம் முழுவதும் அனைத்து தேர்வு மையங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.
    • சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நாளில் ஏராளமானோர் தேர்வு எழுதினர்.

    சேலம்:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரை ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -2 தேர்வு, கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் என 2 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

    தனியார் பள்ளி ஆசிரியர்கள்

    அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு தொடங்கியது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நாளில் ஏராளமானோர் தேர்வு எழுதினர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணிக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை உள்ளதால் ஏராளமானோர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக இதில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், டியூசன் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், மற்றும் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்று தேர்வு எழுதினர்.

    முன்னதாக தேர்வு மைய நுழைவு வாயிலில் ஹால்டிக்கெட் பரிசோதிக்கப்பட்டு தேர்வு அறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புகைப்படத்துடன் கூடிய அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை வைத்திருந்தனர். ஆசிரியைகள் பலர் தங்களது பெற்றோருடன் தேர்வு மையத்துக்கு வந்ததை காண முடிந்தது. தேர்வர்கள் உடன் வந்தவர்கள் தேர்வு முடியும் வரை தேர்வு மையத்தின் வெளியே காத்திருந்தனர்.

    தேர்வுக்கான பணியில் அரசு கல்லூரி பேராசிரியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்வு மைய நுழைவு வாயிலில் போலீசார் மற்றும் கல்லூரிகளில் உள்ள தனியார் வாட்ச்மேன்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிறப்பு பஸ்கள்

    தேர்வையொட்டி கிராம புறங்களில் இருந்து தேர்வு எழுத வருபவர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் சேலம், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், தாரமங்கலம், கொளத்தூர், மேச்சேரி உள்ளிட்ட இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • ஆசிரியா் பணி யிடங்களை நிரப்பும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுகிறது.
    • நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலி யாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணி யிடங்களை நிரப்பும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுகிறது. அதன்படி கடந்த மாா்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    மாநிலம் முழுவதும் இத்தோ்வை எழுத ஆயிரக்கணக்கானோா் விண்ணப்பித்துள்ளனா். நாளை(சனிக்கிழமை) 19-ந்தேதி வரை நடைபெறும் தாள் - 1 தோ்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில் 1,035 போ், நாமக்கல் டிஜிட்டல் ஹப் நிறுவனத்தில் 900 போ், திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வி நிறு வனத்தில் 900 போ், கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களில் 900 போ், கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியில் 1,716,

    குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்களில் 800 போ், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் 720 போ் என மொத்தம் 6,971 போ் ஆசிரியா் தகுதித் தோ்வை எழுதுகின்றனர். இதற்காக 200-க்கும் மேற்பட்ட கல்வித் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    ×