search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகனம்"

    வெடிவிபத்தில் இறந்தவர்களின் உடல் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூரில் செயல்பட்ட யாழ் அன்ட் கோ என்ற நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் தஞ்சை மருத்துவ கல்லூரியிலும், 7 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வெடி ஆலையின் உரிமையாளர் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், அவரின் மருமகன் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    வெடி விபத்தில் உயிரிழந்த திடீர்குப்பத்தை சேர்ந்த ரவி, அவரது மனைவி சிவகாமி மற்றும் வெண்ணிலா, ராசாத்தி ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் வீட்டிற்கு ஆம்பு லன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து சுடுகாட்டிற்கு எடுத்து சென்று நள்ளிரவு 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. வெளியூரை சேர்ந்தவர்களின் சடலங்கள் அமரர் ஊர்தி வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

    • கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது.
    • வெள்ளம் காரணமாக சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் வீட்டின் அருகிலேய வைத்து நவீன முறையில் தகனம் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஆலப்புழா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.

    கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. ஆலப்புழா மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் இதுவரை வடியாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    அத்தியாவசிய தேவைக்கு மக்கள் வெளியே வந்து செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் தாளவாடியில் விபத்தில் சிக்கி பலியான முதியவரின் உடலை அவரது குடும்பத்தினர், வெள்ளம் காரணமாக சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் வீட்டின் அருகிலேய வைத்து நவீன முறையில் தகனம் செய்தனர்.

    தாளவாடியைச் சேர்ந்த முதியவர் கோபி (வயது 72) கடந்த மாதம் 29-ந்தேதி சாலை விபத்தில் சிக்கினார். கோட்டயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 7-ந்தேதி இறந்தார். கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வீடு உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியது.

    இதனால் கோபியின் உடலை வீட்டிற்கு கொண்டு வராமல் ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்தனர். தொடர்ந்து வெள்ளம் வடியாமல் இருந்ததால் வீட்டிலேயே இறுதிச்சடங்கு நடத்தி, வீட்டின் அருகிலேயே நவீன முறையில் தகனம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    அதன்படி, முதியவர் கோபியின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வீட்டில் இறுதிச் சடங்குகள் முடிந்ததும், அவரது வீட்டின் அருகிலேயே தண்ணீர் தேங்கி இருந்த நடமாடும் தகன மேடையில் நவீன முறையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

    • பாலத்தின் மேல் பகுதியில் நின்று அவரது உடலை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
    • சர்வீஸ் சாலையில் வைத்தே குஜூன்மோனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சக்குளத்துகாவு பகுதியை சேர்ந்தவர் குஜூன்மோன்(வயது72). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் அப்பகுதியில் பூத் தலைவராக உள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடும் மூச்சு திணறலால் அவதிப்பட்ட குஜூன்மோனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

    அவரை அவரது உறவினர்கள் நீரில் மூழ்கிய பகுதி வழியாக சிரமப்பட்டு கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை இறுதிச்சடங்கிற்கு எடுத்துச் செல்வதிலும் வெள்ளம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டது.

    ஆகவே அவரது உடல் புஸ்பகிரி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. ஆனால் வெள்ளம் வடியாததால் அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஆகவே அவரது இறுதி சடங்கை வெள்ளம் இல்லாத பொது இடத்தில் வைத்து நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து குஜூன்மோனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள சர்வீஸ் சாலைக்கு கொண்டு வரப்பட்டது. பாலத்தின் மேல் பகுதியில் நின்று அவரது உடலை பொதுமக்கள் பார்வையிட்டனர். பின்பு சர்வீஸ் சாலையில் வைத்தே குஜூன்மோனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    அவரது மகன் சுனில்குமார் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதய நோயால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×