search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் தப்பி ஓட்டம்"

    திருவையாறில் லாரி வீட்டின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவையாறு:

    அரியலூரில் இருந்து ஒரு லாரி சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி நேற்று இரவு வந்தது. அந்த லாரி நள்ளிரவு 1.30 மணி அளவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அய்யனார் கோவில் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது லாரி திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் சுவரில் சேதம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி சுவரில் மோதியபோதிலும் காயமின்றி உயிர் தப்பிய டிரைவர் அங்கு லாரியை விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்தும் திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திருவையாறில் லாரி வீட்டின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×