search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூரில் லாரியில் கடத்தி வந்த ரூ. 20 லட்சம் குட்கா பறிமுதல் - டிரைவர் தப்பி ஓட்டம்
    X

    ஸ்ரீபெரும்புதூரில் லாரியில் கடத்தி வந்த ரூ. 20 லட்சம் குட்கா பறிமுதல் - டிரைவர் தப்பி ஓட்டம்

    ஸ்ரீபெரும்புதூரில் லாரியில் கடத்தி வந்த ரூ. 20 லட்சம் குட்கா பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GudkhaSeized

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்த மினி லாரி நிற்காமல் சென்றது. போலீசார் அதனை விரட்டிச்சென்றனர். உடனே லாரியை டிரைவர் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    போலீசார் லாரியை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 145 பெட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் ஆகும். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். #GudkhaSeized

    Next Story
    ×