search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி சர்ட்"

    • பாராளுமன்ற தேர்தல் என்றாலும் 234 சட்டமன்ற சபை தொகுதிகள் வாரியாக பிரசார கூட்டம், தெருமுனை பிரசாரம் மற்றும் தேர்தல் பணி மேற்கொள்ளப்படும்.
    • கட்சி சின்னம்,கொடி, பெயர் மற்றும் தலைவர் படங்களுடன் டி-சர்ட் மற்றும் தொப்பிகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    தேர்தல்களின்போது அரசியல் கட்சி பெயர்களில் டி-சர்ட் தயாரிப்பது வழக்கம். தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் நடைபெறும் பிரசார பயணங்களுக்கு தேவையான டி-சர்ட்கள் திருப்பூரில் கொள்முதல் செய்யப்படும்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற கட்சியினர் மாநிலம் முழுவதும் பயன்படுத்த திருப்பூர் கட்சியினர் மூலம் ஆர்டர் கொடுத்து தயாரிப்பார்கள்.

    தற்போது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதையடுத்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பிரசாரத்திற்காக தயாரிக்கப்பட்டு இருந்த பனியன்களில் கட்சி கொடி, சின்னம், தலைவர் படங்கள் அச்சிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் என்றாலும் 234 சட்டமன்ற சபை தொகுதிகள் வாரியாக பிரசார கூட்டம், தெருமுனை பிரசாரம் மற்றும் தேர்தல் பணி மேற்கொள்ளப்படும். கட்சி சின்னம்,கொடி, பெயர் மற்றும் தலைவர் படங்களுடன் டி-சர்ட் மற்றும் தொப்பிகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பிரசாரத்திற்கு தேவையான பனியன்கள் வெள்ளை உள்ளிட்ட கலர்களில் தயாரித்து வைத்து விட்டோம். தற்போது அதில் சின்னம், கொடி, தலைவர் படங்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெறுகிறது. 2, 3 நாட்களில் இந்த பணிகள் முடிந்து விடும். தயாரான பனியன்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×