search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டவுன் பஸ்"

    • சாலைப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
    • அரசு நிலத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடவசதி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து நகர அளவிலான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். திருப்–பூர் பழைய பஸ் நிலையம் முன் தினசரி மார்க்கெட்டில் பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்க வேண்டும். மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு இல்லாமல் கடைகளை ஏலம் விட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நேரில் ஆய்வு செய்யப்படும் என்று சுப்பராயன் எம்.பி. கூறினார்.

    கலெக்டர் வினீத் பேசும்போது, கோடைகாலத்தில் குடிநீர் வினியோக தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது என்றார்.மேயர் தினேஷ்குமார் பேசும்போது, 4-வது குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது மின்மோட்டார்களை இயக்குவதில் மின்சார கட்டண செலவு அதிகாரிக்கும். இதற்காக மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தார்.

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில்வழியில் இருந்து தென்மாவட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையங்களுக்கு இடையே டவுன் பஸ்களை தொடர்ச்சியாக இயக்க வேண்டும். கோவில்வழி பஸ் நிலைய பணிகள் தொடங்கும்போது அருகில் உள்ள அரசு நிலத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடவசதி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவ- மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.
    • ஓட்டுநர், நடத்துநர்களுக்கு படி குறைவாக வருவதால் டவுன் பஸ்களை இயக்க ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 27 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தேவகோட்டை சுற்றியுள்ள கல்லல், வெற்றியூர், முப்பையூர், கோவிந்தமங்கலம், திருப்பாக்கோட்டை, அதங்குடி, கண்ணங்குடி, சிறுவாச்சி, ஆறாவயல், உஞ்சனை, புதுவயல் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு வர அரசு பஸ் மட்டுமே உள்ளது.

    தேவகோட்டையில் 10- க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் வந்து செல்ல இந்த பஸ்களை நம்பியே உள்ளனர்.

    பெரும்பாலான டவுன் பஸ்களில் டயர்கள் மோசமான நிலையிலும், தரம் குறைந்தும் உள்ளன.இந்த பஸ்கள் தான் கிராமங்களுக்கு சென்று வருகிறது. அவ்வப்போது டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு அரசு டவுன் பஸ்களின் அவல நிலை குறித்த வீடியோவை அரசு பஸ் டிரைவர் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    தற்போது தினமும் 5-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தங்கள் கிராமத்திற்கு பஸ் வரவில்லை என்றால் அன்று மாணவ, மாணவிகள் விடுமுறை தான் எடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

    பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடுகளுக்கு செல்ல மாலை நேரத்தில் பஸ் இல்லாததால் சில நாட்கள் பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

    இது பற்றி அரசு போக்குவரத்து கழக பணியாளர் கூறுகையில், ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் இலவச பயணத்தால் டவுன் பஸ்களில் வசூல் குறைவாக இருக்கிறது.

    இதனால் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு படி குறைவாக வருவதால் டவுன் பஸ்களை இயக்க ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. உடனடியாக ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.அரசு டவுன் பஸ்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.

    • திருமங்கலம் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் டவுன்பஸ் நிறுத்தப்பட்டது.
    • பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா–விற்குட்பட்டது நேசனேரி கிராமம். சுமார் 400 வீடுகள் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு மதுரையில் இருந்து சிவரக்கோட்டை செல்லும்டவுன்பஸ் தினசரி 5 முறை வந்து செல்கிறது.

    இந்த பஸ் மூலமாக செங்கப்படை மற்றும் திருமங்கலம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சென்று மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கிராமமக்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்த பஸ்சை நம்பித்தான் உள்ளனர்.

    நேசனேரி-செங்கப்படை ரோட்டில் அமைந்துள்ள மின்கம்பிகள் திடீரென உயரம்குறைந்து தாழ்வனது. இதனால் மின்கம்பிகள் பஸ்சில் உரசத் தொடங்கின. மழைக்கு மின்கம்பம் பூமிக்குள் இறங்கியதால் மின்கம்பிகள் தாழ்வானது.

    இதனால் மதுரையில் இருந்து சிவரக்கோட்டைக்கு சென்ற டவுன் பஸ்கள் நேசநேரி கிராமத்திற்குள் வரவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

    இதனை தொடர்ந்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். தாழ்வான மின்கம்பிகளை மின்வாரியத்தில் கூறி உடனடியாக சீர்படுத்தவும், மண்சாலையை சரிசெய்தால்தான் பஸ்சை மீண்டும் இயக்கமுடியும் என தெரிவித்தனர்.

    திருமங்கலம் மின்வாரியம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றிக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். மின்கம்பிகள் சரி–செய்த பின்புதான் மீண்டும் பஸ் போக்குவரத்து நடைெபறும் என்ற தகவல் கிராமமக்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    • வாடிப்பட்டி பகுதிக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • வாடிப்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமை யிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி, பேரூராட்சிஅலுவலர்கள், வனத்துறை, மின்சார துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, தீயணைப்பு த்துறை உள்ளிட்ட அரசு துறையைச் சே ர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் சோழவந்தான் வடகரை கம்மாய்பகுதியில்உள்ள சீமை கருவேலங்காட்டுக்குள் காட்டு பன்றிகள் அதிகம் இருப்பதால் விவசாய விளைப்பொருட்களை சேதப்படுத்துகிறது என்றும், அவற்றை முறையாக பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்றும், மதுரையில் இருந்து வாடிப்பட்டிக்கு மெட்ரோ ரெயில் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    மேலும் கிராம பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றும், நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், வாடிப்பட்டி பேரூராட்சியில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் விதமாக சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்றும், கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும்,

    வாடிப்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாடிப்பட்டி பகுதியில்முன்பு இருந்தது போல் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும்விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    முடிவில் தென்னை விவசாயசங்கத் தலைவர் சீதாராமன் நன்றி கூறினார்.

    ×