search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி உற்பத்தியாளர்"

    • 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விசைத்தறி ஜவுளி தொழில் காப்பாற்றி வருகிறது.
    • விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளது.

    பல்லடம் :

    மின் கட்டண உயர்வில் சலுகை கேட்டு சென்னையில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சந்தித்தனர்.

    இதுகுறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விசைத்தறி ஜவுளி தொழில் காப்பாற்றி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நூல் விலை உயர்வு, உற்பத்தி செய்த காடா ஜவுளிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தால் விசைத்தறி தொழில் முற்றிலும் அழிந்துவிடும். எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மேலும் சலுகைகள் வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின் வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    எங்களது கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி நல்ல பதில் கூறுவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தமிழக முதல்வர் விசைத்தறி தொழிலுக்கு சலுகை அளித்து ஜவுளித் தொழிலை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாதம் 1.50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
    • தொழிலுக்காக பெற்ற முதலீட்டுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஏற்கனவே சிரமப்பட்டு வருகிறோம்.

    பல்லடம் :

    பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 'எல்.டி.சி.டி., மற்றும் எச்.டி., மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு டிமாண்ட், யூனிட் கட்டணம் உயர்வு மற்றும் 'பீக் ஹவர்ஸ்' கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.ஜி.எஸ்.டி., கொரோனா, விசைத்தறி கூலி பிரச்சினை, நூல்விலை உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

    மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், தொழிலை விட்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.தொழிலுக்காக பெற்ற முதலீட்டுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஏற்கனவே சிரமப்பட்டு வருகிறோம். மின் கட்டண உயர்வால், குறைந்தபட்சம், மாதம் 1.50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழல் உருவானால், வங்கிக் கடன்களை செலுத்த முடியாமல் நஷ்டத்தை சந்தித்து தொழிலை கைவிடும் நிலை ஏற்படும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில்,மின்சாரம் சார்ந்த மற்றும் சோலார் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவற்றில் உள்ள பிரச்னைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. தொழிலை விரிவு படுத்துவதே அரசின் நோக்கம். விரைவில் தொழில்துறையினர் ஏற்றுக் கொள்ளக்கூடிய குறைந்த மின் கட்டண உயர்வு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த பதில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் நல்லதொரு தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×