search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிகட்டு"

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது.
    • ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

    ஆவாரங்காடு, கலிங்கபட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய 4 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் 4 கிராமங்களின் கோவில் காளைகளும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் முதலில் வாடிவாசல் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணா மூர்த்தி கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது.

    இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் வழங்கப்பட்டது.


    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப் பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

    போட்டியில 650 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் தட்சிணா மூர்த்தி மேற்பார்வையில் வருவாய்துறையினர். பொதுப்பணித்துறையினர், கால்நடை மருத்து வக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்தனர். இதே போல் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்
    • வெற்றி பெற்ற காளை, வீரர்களுக்கு 3 லட்சம் ரூபாய் அளவிலான பரிசுகள் வழங்கப்பட்டது

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். 4-ம் ஆண்டாக இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதற்காக ஊரின் மையப்பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது.முன்னதாக மாடுபிடி வீரர்கள் 424 பேர் பதிவு செய்து இருந்த நிலையில் சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். 415 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், சேலம், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து 550 மாடுகள் களம் கண்டன.முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் 50 பேர் கொண்ட குழுவினராக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களாக களம் இறக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து காலை 7 மணி முதல் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.இதில் ஏராளமான காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடாமல் மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டி சென்றது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் ஈச்சம்பட்டி கிராமத்தின் சார்பில் சைக்கிள், கட்டில், பீரோ, மின்விசிறி, டைனிங் டேபிள், பித்தளை அண்டா, சில்வர் அண்டா என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தன் சொந்த செலவில் ரொக்கப் பணமும் வழங்கினார்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர். அதில் 58 பேர் சிறுகாயம் அடைந்து மண்ணச்சநல்லூர் மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆல்பர்ட் மற்றும் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு பேரவை, விழா குழு கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கல்பாளைம் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • திருமானூர் அருகே ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது
    • இப்போட்டியில் 678 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை காவல் கண்கணிப்பு அலுவலர் ஆரோக்கிய அரி, டி.எஸ்.பி. சங்கர்கனேஷ் மற்றும் கிராம நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், புதுக்கோட்டை மங்கலமாதா கோவில் பங்குதந்தை ரெஜிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான இப்போட்டியில் 678 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் கலந்து கொண்டுள்ள காளைகள் மற்றும் வீரர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதில் 33 மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. 2 பேர் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாடு பிடி வீரர்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர், சாப்பாடு வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாட்டை அடக்கிய மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத மாட்டு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவிலில் நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.முன்னதாக போட்டியை முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். மொத்தம் எட்டு குழுக்களாக வீரர்கள் பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கி வருகின்றனர். முதலில் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து தொடர்ந்து மற்ற காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் கால்நடை துறையின் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பணம் முடிப்பு, சைக்கிள், டிரஸ்சிங் டேபிள், சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்டவைகள் பரிசுகளாக வழங்கப்படுகிறது.போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்டு களித்து வருகின்றனர். மாவட்ட மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காயம் அடைபவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். விபத்து ஏதும் ஏற்பட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

    பாதுகாப்பு பணியில் இலுப்பூர் டி.எஸ்.பி. காயத்ரி தலைமையில் 132 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • 19 பேர் காயம் அடைந்தனர்
    • பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மஞ்சுவிரட்டு பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதனை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.19 பேர் காயம் அடைந்தனர்.

    • வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள்
    • பங்குனி உத்திர திருவிழாவை முனனிட்டு நடைபெற்றது

    புதுக்கோட்டை, 

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலையில் ஜல்லிகட்டு நடைபெற்றது.  நான்கு ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொள்ள வைக்கப்பட்டன.   வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்கள் தங்களது துணிச்சலை காட்டினர். ஜல்லிகட்டு முன்னிட்டு அப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

    • முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
    • அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த வருடமும் மழையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளருமான தவ பாஞ்சாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜல்லிக்கட்டில் பல்வேறு புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்ற காளைகளுக்கும் தங்க நாணயம், கட்டில், பீரோ, சைக்கிள், மிக்சி, பேன் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி டி.எஸ்.பி. தலைமையில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் முன்னிலையில் போலீசார் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
    • ஜெயங்கொண்டம் அருகே பூவாயிகுளம் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆலயத்தின் முன்பாக நடைபெற்றது. போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு சீறி பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர்.மாடுபிடி வீரர்கள் 25,25 வீரர் சுழற்சிமுறையில் களம் இறக்கப்பட்டனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் சில்வர் அண்டா, சில்வர் குவளை, பீரோ, கட்டில், சைக்கிள், டேபிள்,கட்டில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், 5 ஆயிரம் 10 ஆயிரம் ரொக்கம் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழா ஜல்லிக்கட்டு போட்டியை உடையா ர்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் உள்ளிட்ட 100-க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.முன்னதாக ஒவ்வொரு காளைகளும், மாடுபிடி வீரர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.வீரர்கள், பொதுமக்கள் காளைகளால் காயம் அடைந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூவாயிகுளம் புனித வனத்து அந்தோணியார் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். இதில் மாடுபிடி வீரர்கள் 33பேர் காயமடைந்தனர் 3 பேர்பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் மருத்துவமனை கொண்டு சென்றனர் அங்கே அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    • மாசி மக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
    • 621 காளைகள், 166 காளையர்கள் கலந்து கொண்ட ஜல்லிகட்டு

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதிமொழி வாசித்து தொடக்கி வைத்தார்.துவக்க விழா நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டார்.திருமானூர் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் சீமான் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, விழாக்குழு நிர்வாகிகள் முருகானந்தம், மதிவாணன், கிஷோர், நரசிம்மன், சூரியமூர்த்தி, திருவேங்கடம், ராஜேந்திரன், ஆனந்தன் மற்றும் பலர் உள்ளிட்டோர் ஏற்பாடுசெய்திருந்தனர்இப்போட்டியில், 621 காளைகள் மற்றும் 166 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் கலந்து கொண்டுள்ள காளைகள் மற்றும் வீரர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 32 பேர் காயம் ஏற்பட்டது. அவர்களில் பரத் என்கிற நபர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருமானூர் ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கு கட்டுப்படாமல் ஓடிய ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கும், ரொக்கப் பணம் உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் விழா குழு சார்பில் வழங்கப்பட்டன.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயபார்த்திபன் உள்பட ஏராளமானோர், பார்வையாளர்களாக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை ப்பராமரிப்புத்துறை) கிரிஸ்டோபர், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், திருமானூர் ஊராட்சி மன்றத் தலைவர் உத்திராபதி மற்றும் சுகாதாரத்துறை, மருத்துவ அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அரியலூர் போலீஸ் டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவில் சுமார் நான்காயிரம் பேர் கலந்துகொண்டனர்.

    • 699 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர்
    • மூனிஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது

    ஆலங்குடி,புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபு ரத்தில் 55 ஆம் ஆண்டு முனீஸ்வரர் கோவில் ஆலய மாசிமகத் விழாவை யொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செல்வி மாடுபிடி வீரர்களுக்கான உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல்துறை அமை ச்சர் மெய்யநாதன், திருவர ங்குளம் ஒன்றி யக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.திருச்சி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 699 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களத்தில் விளையாடினர். அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விழா குழுவினர் சார்பாக கட்டில், சைக்கிள், பீரோ, பிரிட்ஜ் மற்றும் இதர பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர் மெய்யநாதன் சார்பில் ஆட்டுக்குட்டி, சைக்கிள், குத்துவிளக்கு, கட்டில் பீரோ, சில்வர் பாத்திரங்கள், மிக்சி, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.முன்னதாக இதில் கலந்து கொள்ள வைக்கப்பட்ட காளைகளுக்கும், களமிறங்கி ய வீரர்களுக்கும் முன்னதாக உரிய மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மேலும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்க ப்பட்டனர். ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினி, காவல் ஆய்வாளர் அழகம் மை உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா கமிட்டி செல்வம் கார்த்திக், இளைஞர்களால் போட்டிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

    • திருச்சி கல்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து 744 காளைகள் சீறிப்பாய்ந்தன
    • காளைகளை அடக்குவதற்காக 375 பேர் களத்தில் இறங்கினர்.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டியினை லால்குடி கோட்டாட்சியர் வைத்தி யநாதன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்று போட்டியினை துவக்கி வைத்தார். திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 744 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்ந்து விடப்பட்டது. காளைகளை அடக்குவதற்காக 375 பேர் களத்தில் இறங்கினர். இவர்களில் 51 பேருக்கு காளைகள் முட்டியதில் காயம் ஏற்பட்டது.

    அனை வருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் 5 பேர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விழாவில் வட்டாட்சியர் செசிலினா சுகந்தி துணைதாசில்தார் சங்கரநாராயணன், பேரூராட்சி தலைவர் பால் துரை, செயல் அலுவலர் குணசேகரன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


    • மாங்கோட்டையில் வடமாடு ஜல்லிகட்டு விழா நாளை நடைபெறுகிறது
    • இதற்காக ஆலங்குடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை காளியம்மன் கோயில் சந்தனகாப்பு விழாவையொட்டி வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நாளை பிப்ரவரி 26ம் தேதி நடைபெற உள்ளது.

    இதில், சிவகங்கை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும், வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஆலங்குடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    இதற்காக அப்பகுதியில் திடல் அமைக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திடலின் நடுவில் பெரிய பள்ளம் வெட்டப்பட்டு உரல் இறக்கப்பட்டது. இதில், ஊர் தலைவர் சின்னத்துரை உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×