search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு
    X

    மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு

    • 699 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர்
    • மூனிஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது

    ஆலங்குடி,புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபு ரத்தில் 55 ஆம் ஆண்டு முனீஸ்வரர் கோவில் ஆலய மாசிமகத் விழாவை யொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செல்வி மாடுபிடி வீரர்களுக்கான உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல்துறை அமை ச்சர் மெய்யநாதன், திருவர ங்குளம் ஒன்றி யக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.திருச்சி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 699 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களத்தில் விளையாடினர். அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விழா குழுவினர் சார்பாக கட்டில், சைக்கிள், பீரோ, பிரிட்ஜ் மற்றும் இதர பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர் மெய்யநாதன் சார்பில் ஆட்டுக்குட்டி, சைக்கிள், குத்துவிளக்கு, கட்டில் பீரோ, சில்வர் பாத்திரங்கள், மிக்சி, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.முன்னதாக இதில் கலந்து கொள்ள வைக்கப்பட்ட காளைகளுக்கும், களமிறங்கி ய வீரர்களுக்கும் முன்னதாக உரிய மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மேலும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்க ப்பட்டனர். ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினி, காவல் ஆய்வாளர் அழகம் மை உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா கமிட்டி செல்வம் கார்த்திக், இளைஞர்களால் போட்டிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    Next Story
    ×