search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல் ஜீவன் திட்டம்"

    • இந்த மாத இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
    • கடந்த செப்டம்பர் மாதமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டம் எனப்படும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஒப்பந்தப் பணியில் நடந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இந்நிலையில், ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 89 வீடுகளுக்கு ரூ.5.64 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் சந்தானம், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் கிராமத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 89 வீடுகளுக்கு ரூ.5.64 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாதப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பா.ஜ.க. விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், பா.ஜ.க. திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் கே. சி. எம். பி. சீனிவாசன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகு பிரசாத்,பா.ஜ.க.மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் வினோத் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் சந்தானம், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டியின்போது குளங்களை சீரமைத்து அழகுபடுத்த சிறப்பு மேம்பாட்டு நிதியாக 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • "ஜல்ஜீவன்" திட்ட, நீராதார நீர்நிலை மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்விற்கு டெல்லியில் இருந்து வந்த மத்திய குழுவினர் இரண்டு குளங்களை ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டியின்போது குளங்களை சீரமைத்து அழகுபடுத்த சிறப்பு மேம்பாட்டு நிதியாக 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோலைப்பொய்கை குளம் மற்றும் திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள வண்ணான்குட்டை என இரண்டு குளங்கள் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் "ஜல்ஜீவன்" திட்ட, நீராதார நீர்நிலை மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்விற்கு டெல்லியில் இருந்து வந்த மத்திய கலாச்சார இயக்குனர் பைத்தே, மத்திய கிடங்கு கழக உதவி இயக்குனர் விக்ரம் கார்க் ஆகியோர் மாமல்லபுரத்தில் சீரமைக்கப்பட்ட இரண்டு குளங்களையும் நேற்று மாலை ஆய்வு செய்தனர். குளங்களின் நீர் கொள்ளளவு, வழித்தடம், பயன்பாடு, வெளியேற்றம், கட்டுமான பணிகளின் உறுதி, இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் உள்ளிட்டவைகளை குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, பொறியாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மணமை, கடம்பாடி, திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குளங்கள் மேம்பாட்டு பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    • ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரகக் குடியிருப்புகளுக்கும் தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • ஜீவன் மிஷன் திட்டத்தினை மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு வெற்றிகரமாக செயல்படு த்துவது அரசின் நோக்க மாகும்.

    தேனி:

    ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊரகக் குடியிருப்புகளுக்கும் தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக 50 சதவீதத்துக்கும் மேல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வாழும் கிராமத்திலிருந்து திட்ட மதிப்பீட்டுத் தொகையில் 5 சதவீதம் மற்ற கிராமங்களிலிருந்து 10 சதவீதம் பொதுமக்கள் பங்களிப்புத் தொகையாக வசூல் செய்து பணிகளை செயல்படுத்திட அரசு மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தினை மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு வெற்றிகரமாக செயல்படு த்துவது அரசின் நோக்க மாகும்.

    எனவே, ஊரகப் பகுதி களில் உள்ள பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் பங்களிப்புத் தொகையினை காலதாமத மின்றி ஊராட்சி நிர்வாகத்தி டம் செலுத்திட வேண்டும் என தேனி மாவட்ட கலெ க்டர் முரளீதரன் தெரி வித்துள்ளார்.

    ×