search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் கிளப்"

    • வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழிக் குற்றங்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது.
    • கல்லூரிகளில் ‘சைபர் கிளப்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவை,

    நவீன உலகில் சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வங்கியிலிருந்து பேசு வதாகக்கூறி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாதுகாப்பு குறியீட்டு எண்ணை பெற்று வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தை திருடுவது, உடனடிக் கடன் வழங்கும் செயலிகள் மூலமாக ஏமாற்றுவது, பரிசுத் தொகை விழுந்துள்ளதாகக் கூறி லிங்கை அனுப்பி மோசடி செய்வது, முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என லிங்க்கை அனுப்பி மோசடி செய்வது என பல வழிகளில் இணைய வழிக் குற்றங்கள் அரங்கேறுகின்றன.

    இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில் கோவை மாநகரில் உள்ள கல்லூரிகளில் 'சைபர் கிளப்' அமைக்கும் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழிக் குற்றங்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது. இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டு, பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் திருடுபோன பணத்தை திரும்பப்பெற வாய்ப்புள்ளது. இதில் தொடர்புடையவர்களை பிடிப்பது கடினம். அதேசமயம் நாம் எச்சரிக்கையாக இருந்தால் இணையவழிக் குற்றங்களில் சிக்காமல் இருக்கலாம்.இணையவழிக் குற்றங்கள், இணையதளங்களை பாது காப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள், பொதுமக்கள் அறிந்திருப்பது அவசியம், என்றனர்.

    கோவை மாநகர காவல் தலைமையிட துணை போலீஸ் கமிஷனர் சுகாஷினி கூறியதாவது:-

    போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், கல்லூரிகளில் 'சைபர் கிளப்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் உள்ள ஐ.டி பிரிவை தலைமையாகக் கொண்டு இந்த கிளப் தொடங்கப்படுகிறது. இக்கு ழுவில் பேராசிரியர்கள், மாணவர்கள் என 30 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.

    இணையவழிக் குற்றங்கள் என்றால் என்ன?, அதில் பாதிக்கப் படாமல் இருப்பது எப்படி? என போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இக்குழு வினர், மற்றவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்துவர். மாநகரில் தற்போது வரை 15 கல்லூரிகளில் சைபர் கிளப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    ×