search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் திருடன்"

    • அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.
    • அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிருந்தால் மண்டல். இவர் புதுச்சேரி சேதராப்பட்டில் வீடு வாடகை எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் பிருந்தால் மண்டல் நேற்று மதியம் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். அப்போது ஒரு மர்ம நபர் பிருந்தால் மண்டலின் செல்போனை திருட முயன்றார். சத்தம் கேட்டு கண்விழித்த பிருந்தால் மண்டல் இதை பார்த்து திடுக்கிட்டு கூச்சலிட்டார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அந்த நபரை முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, அந்த நபரை சேதராப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை செய்ததில் அவர், திண்டிவனம் சிங்கனூர் புது காலனி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த அசோக் என்பதும், இவர் மீது சென்னை, விக்கிரவாண்டி மற்றும் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அசோக் தான் வசிக்கும் பகுதி அருகே அவர் டிபன் கடை நடத்தி வருவதும், பண தேவைக்காக பகுதி நேரமாக இதுபோல் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே, செல்போன் திருடனை பொதுமக்கள் பிடித்து முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • சந்தேகப்படும்படியாக கையில் பையுடன்நடந்து வந்து கொண்டிருந்த ஒரு மர்ம நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • 14 திருட்டு வழக்குகள் சென்னை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருவது தெரியவந்தது

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து போலீசார் வீரராஜ் கோபிநாத் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும்படியாக கையில் பையுடன்நடந்து வந்து கொண்டிருந்த ஒரு மர்ம நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்தார். இந்நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போது சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த மேகநாதன் (வயது34) என தெரிய வந்தது. இவர் பையை சோதனை செய்த போது செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவமாணவர்கள் விடுதியில் செல்போன்கள் திருடியதாக தெரியவந்தது. இவரிடம் இருந்து 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேலும் இவர் மீது 14 திருட்டு வழக்குகள் சென்னை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருவது தெரியவந்தது . பின்னர் இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பெரியார் பஸ் நிலையத்தில் செல்போன் திருடனை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரட்டி பிடித்தார்.
    • சார்ஜ் போடப்பட்டு இருந்த செல்போனை நைசாக திருடிக் கொண்டு தப்பி ஓடினார்கள்.

    மதுரை

    தேனி மாவட்டம் கூட லூரை சேர்ந்தவர் ராஜா (வயது 29). புரோட்டா மாஸ்டர். ராஜா தனது உறவினர் விஜயகுமார் என்பவருடன் நேற்று இரவு மதுரை வந்தார். அவர்கள் பெரியார் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    ராஜா முதல் பிளாட்பாரத்தில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் சார்ஜ் போடப்பட்டு இருந்த செல்போனை நைசாக திருடிக் கொண்டு தப்பி ஓடினார்கள். அதனை கண்ட ராஜா, திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். இதனை கண்ட திடீர்நகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி திருடர்களை விரட்டிச்சென்றார்.

    அப்போது ஒருவன் தவறி கீழே விழுந்தான். அவனை லோகேஸ்வரி மடக்கி பிடித்தார். அவனிடம் இருந்து ராஜாவின் செல்போன் மீட்கப்பட்டது.

    விசாரணையில் செல்போனை திருடியவர் கேரள மாநிலம் கொட்டாளி கிராமத்தைச் சேர்ந்த ஜெனிபர் (வயது 38) என்பது தெரிய வந்தது. அவர் மதுரையில் கடந்த சில நாட்களாக தனது கூட்டாளி ஒருவருடன் தங்கி இருந்து திருட்டி ஈடுபட்டு வந்துள்ளார். தப்பி சென்ற அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

    செல்போன் திருடனை விரட்டி பிடித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பயணிகள் பாராட்டினர்.

    • செல்போனை பறித்துக்கொண்டு லோகேஸ்வரனை விடுவித்தனர்.
    • லோகேஸ்வரனை கைது செய்த போலீசார் அவரை கிளை சிறையில் அடைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி அரசு கல்லூரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பி.எட்.தேர்வு நடந்தது.இந்த தேர்வை எழுத வந்தவர்களின் செல்போன்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தேர்வு மையத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தன.

    அந்த செல்போனில் ஒன்றை திருடியதாக எழுத புகாரில் செட்டிக்கரை அருகேயுள்ள டீக்கடை குரும்பபட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன்(வயது 19) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.அப்போது தான் ஒரே ஒரு செல்போனை மட்டுந்தான் திருடினேன் என்று அவர் கூறினார்.பின்னர் திருடப்பட்ட செல்போனை பறித்துக்கொண்டு லோகேஸ்வரனை விடுவித்தனர்.

    இந்நிலையில் தேர்வுநடந்த அன்று கல்லூரியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பொது லோகேஸ்வரன் பலரது செல்போன்களை திருடி சென்ற காட்சி இருந்தது.இதனால் லோகேஸ்வரனை கைது செய்த போலீசார் அவரை கிளை சிறையில் அடைத்தனர்.

    ×