search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரங்கப் பாதை"

    • அகல ெரயில் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
    • அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெறு வதாக தெரியவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் முதல் பேரளம் வரை இயங்கிவந்த ெரயில் போக்குவரத்து, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. காரைக்கால் மக்களின் வேண்டுகோளை ஏற்று, காரைக்கால் முதல் நாகூர் வரையில் அகல ெரயில் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இந்நிலையில், பெரும்பா லுமான வணிகர்களின் வேண்டுகோளை ஏற்று, காரைக்கால் முதல் பேரளம் வரையிலான ெரயில் போக்குவரத்திற்கு, கடந்த சில ஆண்டுகளாக அகல ெரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூர் ெரயில் நிலையம் அருகே, திருவாரூர் மாவட்ட எல்லை பகுதிகள் உள்ளது.

    காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரிலிருந்து தமிழக மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை இணைக்கும் ஜவகர் சாலையில் மக்கள் ெரயில் பாதையை கடந்து செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைத்துதர வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அப்பகுதியில் சுரங்க பாதை அமைத்தால் திருவாரூர் மாவட்ட பகுதிகளான உபயவே தாந்தபுரம், மேனாங்குடி, செம்பியநல்லூர், ரெட்டக்குடி உள்ளிட்ட ஆறு பஞ்சாயத்துக்களிலும் உள்ள சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறு வார்கள் என்பதால், அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால், அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெறு வதாக தெரியவில்லை. மேற்கண்ட கோரிக்கையை வலி யுறுத்தும் வகையில், ஜவகர் சாலை அருகே, அப்பகுதியில் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்படோர் ஆனந்தன், துரைசாமி ஆகியோர் தலைமையில் ஒன்று கூடி, காரைக்கால்-பேரளம் அகல ெரயில் பாதையில், அம்பகரத்தூர் ஜவகர் சாலை வழியாக, சுரங்கப் பாதை அமைத்து தர வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    • பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர்.
    • புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் அருகே பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல நகரும் படிக்கட்டு வசதியுடன் புதிய சுரங்கப் பாதை விரைவில் திறக்கப்படவுள்ளது.

    சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகில் வாகன நெரிசல் தினமும் அதிகரித்து வருகிறது. இதன் அருகில் அமைந்து உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் இந்த சிக்னல் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டு வந்தது.

    இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பொது மக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல வசதியாக நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.

    இந்த புதிய சுரங்கப் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்து உள்ளன.பொதுமக்கள் சுரங்க நடைபாதையில் எளிதில் செல்ல நகரும்படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய சுரங்கப்பாதை வழியாக பொது மக்கள் சாலையை கடந்து மறுபுறம் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எளிதில் செல்லலாம். இதற்காக புதிய சுரங்கப் பாதையின் நுழைவு வாயில் அருகே இரு புறமும் 2 'எஸ்கலேட்டர்கள்' மற்றும் கிரானைட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுரங்கப்பாதையின் சுவர்களில் பொதுமக்களை கவரும் வகையில் அழகிய இயற்கை காட்சி ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

    இந்த புதிய சுரங்க நடை பாதையால் பொதுமக்கள் நீண்ட நேரம் அங்குள்ள சிக்னல் பகுதியில் காத்திருப்பது தவிர்க்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த நவீன சுரங்க நடைபாதையை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • சென்னை மெமோரியல் ஹால் சிக்னல் அருகில் தினமும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.
    • பொதுமக்கள் நீண்டநேரம் இந்த சிக்னல் பகுதியில் காத்திருப்பது குறையும்.

    சென்னை:

    சென்னை மெமோரியல் ஹால் அருகே பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல வசதியாக "எஸ்கலேட்டருடன்'' சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மெமோரியல் ஹால் சிக்னல் அருகில் தினமும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் இந்த சிக்னல் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலநிலை உள்ளது. இதனால் பொது மக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த சாலையை பொது மக்கள் எளிதில் கடந்து செல்வ தற்காக பூமிக்கடியில் 'எஸ்கலேட்டர்' வசதியுடன் நவீன சுரங்க நடைபாதை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டது.

    இந்த நவீன சுரங்க நடைபாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன. பொது மக்கள் இந்த சுரங்க நடைபாதையில் செல்ல படிக்கட்டுகள் மற்றும் 'எஸ்கலேட்டர்' வசதிகள், காற்றோட்ட வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக பொதுமக்கள் எளிதில் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு செல்லலாம்.

    இதற்காக சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் அருகே இருபுறமும் 2 'எஸ்கலேட்டர்கள்' மற்றும் நவீன கிரானைட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் நீண்டநேரம் இந்த சிக்னல் பகுதியில் காத்திருப்பது குறையும். பொதுமக்கள் பயன் பாட்டுக்கு இந்த சுரங்க நடைபாதை விரைவில் திறக்கப்பட உள்ளது.

    ×