search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்கசாவடி"

    • சுங்க சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் 6 கார்கள்மீது, அந்த கார் மோதி, விபத்தை ஏற்படுத்தியது.
    • மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய நபருக்கும், விபத்தில் லேசாகக் காயம் ஏற்பட்டது.

    மும்பை:

    மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப் பாலத்தில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடக்கிறது.

    காரை கடல் பாலத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, கடலுக்குள் குதித்து பலர் தற்கொலை செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு பாலத்தின் அருகே உள்ள பாந்த்ரா சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.

    அப்போது வொர்லியில் இருந்து கார் ஒன்று, கடல் பாலத்தில் பாந்த்ராவை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. டோல்கேட் அருகில் வந்தபோது அந்த கார், முன்னால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின்மீது மோதியது.

    மோதிய வேகத்தில் சம்பவ இடத்திலிருந்து அதனை ஓட்டி வந்தவர் வேகமாகச் செல்ல முயன்றார்.

    அப்போது சுங்க சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் 6 கார்கள்மீது, அந்த கார் மோதி, விபத்தை ஏற்படுத்தியது.

    கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டதால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதில் மொத்தம் 6-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.

    சில கார்கள் நொறுங்கின. சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த கோர விபத்து சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.

    இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அதில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.

    மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய நபருக்கும், விபத்தில் லேசாகக் காயம் ஏற்பட்டது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர், குஜராத்தைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. அந்த காரைப் பறிமுதல் செய்து, காரை ஓட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் காரை ஓட்டி வந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.

    இந்த விபத்தால், மும்பை கடல் பாலத்தில் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு கார்களும் இதர வாகனங்களும் அணிவகுத்து நின்றன. விடிய விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலையில்தான் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. 

    • உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.
    • திருமங்கலம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளின் ஆேலாசனை கூட்டம் நேற்று நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் திருமங்கலம் பகுதி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தி வருகிறது.

    இது தொடர்பாக திருமங்கலம் உள்ளூர் வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள்-சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. அவ்வப்போது கட்டண விலக்கு அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை சுங்கச்சாவடி நிர்வாகம் தொடரும்போது மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டண விலக்கு அளித்தது. கடந்த 1-ந் தேதி முதல் சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன் மாதாந்திர கட்டணமாக ரூ.310 என நிர்ணயம் செய்து நோட்டீஸ் அனுப்பியது. இதை கண்டித்து கடந்த 22-ந் தேதி கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தன.

    இந்த போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன் பிறகு அமைச்சர் மூர்த்தி இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கம் போல் திருமங்கலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் திருமங்கலம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளின் ஆேலாசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் பங்கேற்றனர்.

    இதில் பேசியவர்கள் அமைச்சர் மூர்த்தி தலைமை யில் நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை.

    கப்பலூர் சுங்கசாவடியில் உள்ளூர் கட்டணங்களுக்கு விலக்கு என்று அமைச்சர் அறிவித்துள்ளது தற்காலிக தீர்வே தவிர நிரந்தர தீர்வு கிடையாது. நிரந்தர தீர்வு மட்டுமே எங்களுக்கு பலனை அளிக்கும்.

    அடுத்த கட்ட நடவ டிக்கையாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்று கையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினால் மட்டுமே சுங்கச்சாவடியை அகற்ற முடியும் என்று தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்று வதற்கானசுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்து வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகளோடு கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கார்களில்,வேன்களில், பஸ்களில் முன்பதிவு செய்தும் பயணம் செய்தனர்.
    • 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தன.

    விழுப்புரம்:

    தமிழக அரசு தீபாவளி பண்டிகையை கொண்டாட வருகிற 25 -ந் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட தமிழக தலை நகர் சென்னையில் பணிபுரிபவர்கள் தென் மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் முதல் கார்களில்,வேன்களில், பஸ்களில் முன்பதிவு செய்தும் பயணம் செய்தனர். எனவே சுங்கசாவடிகளில் நேற்று முன்தினம் 40 ஆயிரம் வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்தன. நேற்று சனிக்கிழமையும் 2-வது நாளாக தொடர்ந்து சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் போக்குவரத்து அதிகம் காணப்பட்டது.

    சுங்கசாவடியை கடக்க வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. வாகனங்கள் அதிகரித்தால் தென்மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு கூடுதலாக2 வழிகளை திறந்து மொத்தம் 8 வழிகளில் வாகனங்கள் சென்றன .நேற்று 2வது நாளாக தென் மாவட்டங்களை நோக்கி 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தன. நேற்று பிற்பகல் 3 மணியளவில் எஸ்.பி., ஸ்ரீ நாதா தலைமையில் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் ,சப்–இன்ஸ்பெக்டர் குமாரராஜா மற்றும் போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    ×