search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார ஆய்வாளர்"

    • உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது.
    • சுகாதார ஆய்வாளர் பாண்டிச்செல்வம் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு "என் குப்பை என் நீர்நிலை கூட்டு பொறுப்பு" உறுதிமொழி எடுத்தல், துப்புரவு பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள் நடந்தன.

    செட்டிகுளத்தில் நகராட்சி தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டு மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டது. துணைத்தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    கவுன்சிலர் லதாமணிகண்டன் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். தூய்மைப்பணி மேற்பார்வையாளர் கார்த்திக், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சுகாதார ஆய்வாளர் பாண்டிச்செல்வம் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படும் .

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகை செல்லம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சுத்தானந்த கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய நகர மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சட்டமன்றத்தில் பொது சுகாதாரத்துறை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படும் என்ற அறிவிப்பை மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்கள்.

    இந்த அறிவிப்பை தமிழ்நாடு அணைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் வரவேற்கிறது.

    மேலும் தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துவுத்துறை முதன்மை செயலர் மற்றும் பொது சுகாதார துறை இயக்குநர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மேலும் இப்பணியிடங்கள் நிரப்பும்போது கொரோனா அதிகம் பரவி வந்த கால கட்டங்களில் தன் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு இந்த பணியை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவே ற்றபட்டன.

    • சுகாதார ஆய்வாளரிடம் ரூ.80 ஆயிரம் நூதன முறையில் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வட்டான் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் டெண்டுல்கர் (வயது 24). இவர் உச்சிப்புளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி ஒரு மொபைல் எண்ணில் இருந்து அவர் சம்பள வரவு, செலவு வைத்திருக்கும் வங்கி கணக்கில் பான் கார்டு பதிவு செய்யாமல் இருப்பதினால், வங்கி கணக்கினை நிறுத்தம் செய்ய போவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதனை பார்த்த சச்சின் டெண்டுல்கர் அதனுடன் வந்த அப்டேட் செய்ய கொடுக்கப்பட்ட லிங்கை இணைபபு செய்து, அதில் கேட்கப்பட்ட சுய விபரம் மற்றும் ஓ.டி.பி. எண்ணினை தொடர்ந்து 3 முறை பதிவு செய்தார்.

    இதையடுத்து அடுத்த அவரது வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து ரூ.79 ஆயிரத்து 998 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி ராமநாதபுரம் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×