என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீஷெல்ஸ்"

    • நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • 1,000 மெட்ரிக் டன் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை இந்தியா வழங்குவது உள்ளிட்ட முடிவுகளும் எப்பட்டன.

    இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்காவையொட்டி அமைந்துள சிறிய தீவு நாடு சீஷெல்ஸ்.

    இந்தியாவுக்கு 6 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் பிரதமர் மோடி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இந்தியா - சீஷெல்ஸ் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன.

    தொடர்ந்து சீஷெல்ஸ் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்பு பொருளாதார தொகுப்பு நிதியாக 17.50 கோடி டாலர் தொகையை இந்தியா அறிவித்துள்ளது.

    இந்த நிதி, சீஷெல்சில் வீட்டுவசதி, மின்சார வாகனங்கள், தொழில் பயிற்சி, சுகாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும்.

    மருந்துவம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கடல்சார் அறிவியல் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு, 1,000 மெட்ரிக் டன் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை இந்தியா வழங்குவது உள்ளிட்ட முடிவுகளும் இதில் எப்பட்டன.  

    • சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
    • சுற்றுலா தொடர்பான வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

    இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர காதல் தம்பதிகளான சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீஷெல்ஸ் நாட்டிற்கு சூர்யா, ஜோதிகா சுற்றுலா சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்தது.
    • டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஜிம்பாப்வே அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக பல அணிகள் குவாலிபையர் சுற்றில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அணிகள் தற்போது விளையாடி வருகிறது. அதில் ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, காம்பியா, மொசாம்பிக், சீஷெல்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் மோதுகின்றனர்.

    இதில் நேற்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் சீஷெல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சீஷெல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 91, டி மருமணி 86 ரன்கள் எடுத்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய சீஷெல்ஸ் அணி 6.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஜிம்பாப்வே அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    முன்னதாக இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் அதிக ரன்கள் குவித்த 3-வது என்ற சாதனையை ஜிம்பாப்வே அணி படைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் (314) நேபாள் அணி உள்ளது. 2-வது இடத்தில் (297) இந்திய அணி உள்ளது.

    ×