search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் மீட்பு"

    • போலீசார் முருகலிங்கம், அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பிரசாத் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
    • மின்சார ரெயிலில் தவித்தபடி பயணம் செய்த சிறுவனை மீட்டு மீண்டும் கடற்கரை மார்க்கமாக வந்த ரெயிலில் அழைத்து வந்து தாய் கிரிஜாவிடம் ஒப்படைத்தார்.

    தாம்பரம்:

    கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கிரிஜா. இவர் தனது 6 வயது மகனுடன் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக வந்தார். மின்சார ரெயில் வந்ததும் கிரிஜா தனது மகனை முதலில் ஏற்றிவிட்டு பின்னர் ரெயில் ஏற முயன்றார்.

    இதற்குள் கூட்ட நெரிசலில் கிரிஜாவால் மின்சார ரெயிலில் ஏற முடியவில்லை. மின்சார ரெயிலும் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் தனியாக ஏறிய அவரது மகன் தவித்தார். இதுபற்றி கிரிஜா அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் கூறி அழுதார். இதையடுத்து ரெயில்வே போலீசார் முருகலிங்கம், அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பிரசாத் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் மின்சார ரெயிலில் தவித்தபடி பயணம் செய்த சிறுவனை மீட்டு மீண்டும் கடற்கரை மார்க்கமாக வந்த ரெயிலில் அழைத்து வந்து தாய் கிரிஜாவிடம் ஒப்படைத்தார். அவர் கண்ணீர் மல்க கதறி அழுத மகனை அணைத்தார். உடனடியாக செயல்பட்ட ரெயில்வே போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • சிறுவனை டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • 2 பேர் என்னை மிரட்டி வாயை பொத்தி வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அரக்கோணம்:

    சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வழியாக ஆலப்புழா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயிலில் எஸ்-1 கோச் அருகில் உள்ள ஏ.சி . பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் பரிசோதனை செய்தார். அந்த பெட்டியில் சுமார் 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் பயந்து மூலையில் பதுங்கி நின்றான். டிக்கெட் பரிசோதகரை கண்டதும் அழுதான்.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிக்கெட் பரிசோதகர் அவரிடம் தன்மையாக பேசி சமாதானப்படுத்தினார். அதற்குள் ரெயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அந்த சிறுவனை டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனால் இந்த ரெயில் 5 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

    அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த சிறுவன் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கிரண்பாபு என்பவரது மகன் அகில் (வயது 11) என்பது தெரியவந்தது. சிறுவன் அகில் போலீசாரிடம் கூறுகையில்:-

    நான் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். நேற்று மாலை டியூசன் முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த 2 பேர் என்னை மிரட்டி வாயை பொத்தி வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஒரு ரெயிலில் சென்ட்ரல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் இந்த ரெயிலில் ஏ.சி. பெட்டியில் என்னை ஏற்றிவிட்டு சென்றுவிட்டனர். ரெயில் வேகமாக சென்றதால் என்னால் இறங்க முடியவில்லை என கூறினார்.

    சிறுவனை வில்லிவாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். உண்மையில் அகிலை கடத்த மர்ம நபர்கள் முயற்சித்தார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து சென்னை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசார் ரெயில் நிலையங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து செய்து வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

    • தந்தை திட்டியதால் மாணவன் வீட்டை விட்டு வெளியேறி எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி வந்தது தெரியவந்தது.
    • மாணவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    போரூர்:

    சென்னை, ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த 12 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட மாணவன் தனது நண்பர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் வீடு திரும்பினான். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மன வேதனை அடைந்த மாணவன் வீட்டை விட்டு வெளியேறினான். பின்னர் அவன் திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து குமரன் நகர் போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுவனிடம் ரோந்து பணியில் இருந்த சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவன், தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாயமான 2 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீசாருக்கு மாணவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

    • மாயமான சிறுவன் ராஜ் பால் பாக் பெங்களூருவில் இருப்பது தெரிந்தது.
    • மீட்கப்பட்ட ராஜ் பால் பாக்கிற்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தில் கொய்யா பண்ணை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கொரியாபா குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜ் பால் பாக் (15).

    கடந்த 18-ந்தேதி பண்ணையில் இருந்து வெளியே சென்ற ராஜ் பால் பாக் பின்னர் திரும்பி வரவில்லை. அவன் மாயமாகி இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

    இதற்கிடையே மாயமான சிறுவன் ராஜ் பால் பாக் பெங்களூருவில் இருப்பது தெரிந்தது. போலீசார் அவனை மீட்டனர்.

    சம்பவத்தன்று தந்தை திட்டியதால் கோபம் அடைந்த அவன், பொன்னேரியில் இருந்து சென்ட்ரல் சென்று அங்கிருந்து ரெயில் மூலம் பெங்களூரு சென்று உள்ளான்.

    பின்னர் ரெயில் நிலையத்தில் இருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்த அவனை பெங்களூரு போலீசார் விசாரித்து அங்குள்ள காந்தி ஆசிரமத்தில் சேர்த்து இருந்தது தெரிந்தது. மீட்கப்பட்ட ராஜ் பால் பாக்கிற்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • மலைபோல் கொட்டப்பட்டுள்ள மணல் மேட்டில் ஈரப்பதம் இருப்பதை உணராத சிறுவன் நடந்து சென்றபோது திடீரென புதைக்குழியில் சிக்கினார்.
    • புதைகுழிக்குள் சிக்கிய அச்சிறுவனை சிறிது நேர போராட்டத்தின் பின், பத்திரமாக மீட்ட இளைஞர்கள் அவனுக்கு முதல் உதவி செய்தனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், 2-ம் சுரங்கம் அருகில் ஊமங்கலம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் அருகே சுரங்கத்திலிருந்து, நிலக்கரி வெட்டி எடுத்துவிட்டு, மண்ணை மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 5 வயது சிறுவன் ஒருவன், மலைபோல் கொட்டப்பட்டுள்ள மணல் மேட்டில் ஈரப்பதம் இருப்பதை உணராத, அச்சிறுவன் நடந்து சென்ற போது, திடீரென புதைக்குழியில் சிக்கினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும், அந்த பகுதியில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லாத நிலையில், சிறுவன் கத்தி கதறி கூச்சலிட்டு சோர்வடைந்து உள்ளான்.

    அப்போது அந்த வழியாக வேலை பார்த்துவிட்டு, வீடு திரும்பிய நெய்வேலி அருகே ரோமாபுரி கிராமத்தைச் சேர்ந்த, இளைஞர்கள் புதைகுழிக்குள் சிக்கிய அச்சிறுவனை கண்டு சிறிது நேர போராட்டத்தின் பின், பத்திரமாக மீட்டு அவனுக்கு முதல் உதவி செய்தனர்.

    பின்னர் அவனது வீடு எங்கு என்று விசாரித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இளைஞர்கள் சிறுவனை மீட்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுவன் திபேந்திரயாதவ் நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டு அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.
    • ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பேரிடர் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டினார்கள்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டம் நாராயண்புரா பதர்பூர் கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் திபேந்திரயாதவ். இவன் நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டு அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.

    அப்போது அவன் திடீரென்று 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையறிந்த அக்கம்பத்தினர் போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சிறுவனை மீட்பதற்காக உடனடியாக அம்மாநில பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கினார்கள்.

    ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பேரிடர் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டினார்கள். அதன் மூலம் சிறுவன் இருக்கும் இடத்தை நெருங்கினார்கள்.

    சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உடனடியாக சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    ×