search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு கட்டண ரெயில்"

    சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #SpecialTrain
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(வ.எண்.06001), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 5-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில்(06002), நெல்லையில் இருந்து வருகிற 7-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் அதிகாலை 3.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    * சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில்(06011), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 1, 8-ந் தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.50 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கமாக, செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில்(06012), செங்கோட்டையில் இருந்து வருகிற 2, 9-ந் தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

    * தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரெயில்(06027), தாம்பரத்தில் இருந்து வருகிற 1, 3, 5, 8 மற்றும் 10-ந் தேதிகளில் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லம்-தாம்பரம் வாரம் 3 முறை செல்லும் சிறப்பு கட்டண ரெயில்(06028) வருகிற 2, 4, 6, 9 மற்றும் 11-ந் தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில்(06007), சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 2, 9-ந் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவில்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண ரெயில்(06008), வருகிற 3, 10-ந் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேரும்.

    * சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரெயில்(06005), சென்டிரலில் இருந்து வருகிற 5-ந் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கமாக எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண ரெயில்(06006), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 7-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரல்-ஆமதாபாத் சிறப்பு கட்டண ரெயில்(06051), சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 6-ந் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு 8-ந் தேதி அதிகாலை 5.45 மணிக்கு ஆமதாபாத் செல்லும்.

    * புதுச்சேரி-சந்திரகாச்சி சிறப்பு கட்டண ரெயில்(06010), புதுச்சேரியில் இருந்து வருகிற 6-ந் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு 8-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

    மேற்கண்ட ரெயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SpecialTrain

    திருவிழாவை முன்னிட்டு சென்னை, தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது.
    சென்னை:

    திருவிழாவை முன்னிட்டு சென்னை, தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு கீழ்க் கண்ட சிறப்பு கட்டண ரெயில் கள் இயக்கப்பட உள்ளது.

    வேளாங்கண்ணி-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில்(வண்டி எண்:06086) செப்டம்பர் 1, 5, 6-ந் தேதிகளில் இரவு 11.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    தாம்பரம்-வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில்(06087) வருகிற 28, 31-ந் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    சென்னை சென்டிரல்-வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில்(06089) வருகிற 30 மற்றும் செப்டம்பர் 6-ந் தேதியும் சென்டிரலில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் சிறப்பு கட்டண ரெயில்(06090) வருகிற 31 மற்றும் செப்டம்பர் 7-ந் தேதியும் இரவு 11.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    நாகர்கோவில்- வேளாங் கண்ணி சிறப்பு கட்டண ரெயில்(06093) செப்டம்பர் 2-ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கத்தில் சிறப்பு கட்டண ரெயில்(06094) செப்டம்பர் 3-ந் தேதி இரவு 11.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே சிறப்பு கட்டண ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு 28-ந் தேதி (இன்று) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில்(வ.எண்.06011) எழும்பூரில் இருந்து அடுத்த மாதம்(ஜூலை) 2-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

    மறுமார்க்கமாக, செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில்(06012), செங்கோட்டையில் இருந்து அடுத்த மாதம் 3-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு 28-ந் தேதி(இன்று) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    கோவை, சென்னை சென்ட்ரல் இடையே சேலம் வழியாக சிறப்பு கட்டண ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
    தருமபுரி:

    கோவை ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (3-ந் தேதி) அதிகாலை 12-15 மணிக்கு சிறப்பு கட்டண ரெயில் (எண். 06040) புறப் பட்டு காலை 8.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயிலில் ஒரு மூன்றடுக்கு ஏர்கண்டிசன் பெட்டி, 6 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், சரக்கு மற்றும் பிரேக் வேன் அடங்கிய 2 பெட்டிகள் இடம் பெற்று இருக்கும்.

    இந்த ரெயிலுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 22-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து கோவை நோக்கி சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
    சென்னை:

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 22-ந்தேதி இரவு 10.30 மணிக்கு, சென்னை சென்டிரலில் இருந்து கோவை நோக்கி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06043) இயக்கப்பட இருக்கிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு கோவையை சென்றடையும்.

    இந்த சிறப்பு கட்டண ரெயிலில் ஒரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி, 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 9 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்ப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #tamilnews
    ×