search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல்"

    புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த 40 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அறிவித்துள்ளார். #PulwamaAttack #CRPFJawans
    மும்பை:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    வீர மரணம் அடைந்த அந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி உள்ளன. மேலும் அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குடும்பத்தினருக்கு திரைப்படத் துறையினரும் நிதி உதவிகளை வழங்கி வருகிறார்கள். நடிகர் அமிதாப்பச்சன் ரூ. 2.1 கோடி நிதி உதவி வழங்கினார்.



    நடிகர் அக்ஷயகுமார் ரூ.5 கோடி வழங்கினார். சல்மான்கான், கிரிக்கெட் வீரர் சேவாக், குத்துச்சண்டை வீரர் வீரேந்திரசிங் ஆகியோரும் நிதி உதவி வழங்கினார்கள்.

    இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். அவர் ரூ.1 கோடி கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த 24-ந் தேதி லதா மங்கேஷ்கரின் தந்தை இறந்த தினமாகும். இதையொட்டி ரூ.1 கோடி நிதி உதவியை அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். #PulwamaAttack #CRPFJawans #LataMangeshkar 

    புல்வாமா தாக்குதலை கண்டித்து இந்தியா மிரட்டல் விடுத்ததை அடுத்து ஐ.நா.சபை தலையிடும் படி பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி கேட்டுக்கொண்டுள்ளார். #PulwamaAttack
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இது இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டெரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.



    அதில் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு காஷ்மீரை சேர்ந்தவரே காரணம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பழி சுமத்தி அப்பகுதியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

    எனவே, இதில் ஐ.நா.சபை தலையிட்டு இப்பகுதியில் அமைதி ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்த வேண்டும்.

    பதட்டத்தை தணிக்க பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுடன் பேச்சு நடத்த இந்தியாவை வற்புறுத்த வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. #PulwamaAttack #UN
    பாராளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் காஷ்மீர் தாக்குதல் நடந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee #PulwamaAttack
    கொல்கத்தா:

    மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் புல்வாமாவில் மத்திய படை மீது கடந்த 14-ந்தேதி தாக்குதல் நடந்திருக்கிறது.

    உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தும் அதை முறையாக தடுக்காமல் இருந்துள்ளனர். ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் அதுவும் பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் தாக்குதல் நடந்திருக்கிறது. நான் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் எனக்கு இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் மீது ஏன் முன்கூட்டியே கடும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன்? இதற்கு பதில் சொல்ல வேண்டும்.



    பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருக்கும் நிலையில் 2005 வீரர்களை 78 வாகனங்களில் ஏற்றி ஒட்டுமொத்தமாக முகாம் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏன் இவ்வாறு ஒட்டுமொத்த மாற்றம் செய்யப்பட்டது.

    பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அதற்கான வாய்ப்பு ஏன் அளிக்கப்பட்டது.

    இந்த தாக்குதலால் அதிர்ச்சியுற்ற நாம் அமைதியாக இருக்கிறோம். ஆனால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தினமும் இதைப்பற்றி வித்தியாசமாக பேசுகிறார்கள். அவர்களுடைய பேச்சை வைத்து பார்க்கும்போது அவர்கள் மட்டுமே தேசப்பற்று கொண்டவர்கள் போலவும், நாங்கள் எல்லாம் வெளிநாட்டினர் போலவும் உள்ளது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார். #MamataBanerjee #PulwamaAttack
    ×