search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.சி.டி.வி"

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலி பர்களுக்கும் ராஜதுரைக் கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்திருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது.
    • சி.சி.டி.வி. கேமராவில் ராஜதுரை அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எறும்புக்காடு புல்லு விளை பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் ராஜதுரை வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பவில்லை.இந்த நிலையில் நேற்று காலை மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் ராஜதுரை பிணமாகக் கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசா ரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராஜதுரை உடலில் காயங்கள் இருந்தது.மர்ம நபர்கள் அவரை செங்கற்களால் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து பிணமாக கிடந்த ராஜதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    கொலை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சி.சி.டி.வி. கேமராவில் ராஜதுரை அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலி பர்களுக்கும் ராஜதுரைக் கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்திருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது.

    இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகர பகுதியில் சீரான முறையில் குடிநீர்விநியோகம் செய்வது குறித்தான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • 57 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் 1,17,000 குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படும் விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகர பகுதியில் சீரான முறையில் குடிநீர்விநியோகம் செய்வது குறித்தான ஆய்வுக்கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர பகுதியில் தற்போது எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்தும் மாநகர பகுதியில் உள்ள 57 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் 1,17,000 குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படும் விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் உள்ள குடிநீர் இணைப்புகள் எத்தனை என்பதை துல்லியமாக கணக்கெடுப்பு செய்து அதன் அடிப்படையில் குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    குடிநீர் விநியோகத்தினை முறைப்படுத்திட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ள பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மாநகர பகுதியில் பணிபுரியும் பிட்டர்கள் பகுதி வாரியாக குடிநீர் விநியோகம் செய்யும் நாள் ,நேரம் ,ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி பகுதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர் விநியோகத்தை சீர்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    மாநகர பகுதியில் அனுமதியற்ற முறையில் குடிநீர் இணைப்புகள் பெறபட்டுள்ளதா என்பதையும் வணிக நிறுவனங்கள் அனுமதி அளித்திற்கு மேற்பட்டு முறைகேடாக குடிநீரை பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்கவும், அனுமதி இல்லாமல் உள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிப்பு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் மாநகர பொறியாளர் ரவி, உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு , சாந்தி , தியாகராஜன், கதிரேசன். .சுப்பையா மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 62 பவுன் நகைகள் கொள்ளையடிக்க ப்பட்டிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளை முகமூடியால் மறைத்தபடி கொள்ளையன்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையை அடுத்த சி.எஸ்.ஐ காம்ப்ளக்ஸில் முன்னாள் வர்த்தக சங்க செயலாளர் ராஜா செல்வின் ராஜ் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இந்தக் கடையின் முன்பக்க சட்டரை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.கடையில் இருந்த 62 பவுன் நகைகள் கொள்ளையடிக்க ப்பட்டிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் சம்பவ இடத்தில் விசா ரணை மேற்கொண்டார்.கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரே கைகள் சேகரிக்கப்பட்டன.

    அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நகைக்கடைக்குள் கொள்ளையன் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

    தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளை முகமூடியால் மறைத்தபடி கொள்ளையன் கடைக்கு வருகிறான். கடையின் முன்பக்க ஷட்டரில் இருந்த பூட்டை உடைத்து அவன் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    அந்த உருவத்தை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 5 தனிப் படைகள் அமைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கு முன்பு நடந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்களுடன் தற்போதைய உருவம் ஒத்து போகிறதா அல்லது புதிய கொள்ளையனா? என அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடு பட்டு வருகின்றனர்.

    சம்பவம் நடந்த கடை யில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை திருட்டு சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டத்தில் தொடர்ந்து குற்றச் செயல்கள் நடந்து வருவ தால் முக்கிய வீதிகள், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வடக்குத்தெரு, மார்க்கெட் சாலை போன்ற பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில் :

    தோவாளை நியூ சிட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31), பூ வியாபாரி.

    இவர் சம்பவத்தன்று நாகர்கோவில் மகளிர் கல்லூரி சாலையில் பூ விற்பனை செய்த ரூ.55 ஆயிரம் பணத்தை தனது ஆட்டோவில் முன்பகுதியில் வாங்கி வைத்திருந்தார்.

    பின்னர் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது ஆட்டோ வில் இருந்த பணம் திருடப்ப ட்டிருந்தது.

    இதுகுறித்து மணிகண்டன் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×