search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் நகைக்கடையில் 62 பவுன் கொள்ளையடித்த வாலிபர் உருவம் சி.சி.டி.வி பதிவில் சிக்கியது
    X

    மார்த்தாண்டம் நகைக்கடையில் 62 பவுன் கொள்ளையடித்த வாலிபர் உருவம் சி.சி.டி.வி பதிவில் சிக்கியது

    • 62 பவுன் நகைகள் கொள்ளையடிக்க ப்பட்டிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளை முகமூடியால் மறைத்தபடி கொள்ளையன்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையை அடுத்த சி.எஸ்.ஐ காம்ப்ளக்ஸில் முன்னாள் வர்த்தக சங்க செயலாளர் ராஜா செல்வின் ராஜ் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இந்தக் கடையின் முன்பக்க சட்டரை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.கடையில் இருந்த 62 பவுன் நகைகள் கொள்ளையடிக்க ப்பட்டிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் சம்பவ இடத்தில் விசா ரணை மேற்கொண்டார்.கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரே கைகள் சேகரிக்கப்பட்டன.

    அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நகைக்கடைக்குள் கொள்ளையன் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

    தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளை முகமூடியால் மறைத்தபடி கொள்ளையன் கடைக்கு வருகிறான். கடையின் முன்பக்க ஷட்டரில் இருந்த பூட்டை உடைத்து அவன் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    அந்த உருவத்தை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 5 தனிப் படைகள் அமைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கு முன்பு நடந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்களுடன் தற்போதைய உருவம் ஒத்து போகிறதா அல்லது புதிய கொள்ளையனா? என அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடு பட்டு வருகின்றனர்.

    சம்பவம் நடந்த கடை யில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை திருட்டு சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டத்தில் தொடர்ந்து குற்றச் செயல்கள் நடந்து வருவ தால் முக்கிய வீதிகள், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வடக்குத்தெரு, மார்க்கெட் சாலை போன்ற பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×