search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாரை பாம்பு"

    • வீட்டில் இருந்த பீரோவின் அடியில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையம் சூலைத் தெருவில் வீட்டில் இருந்த பீரோவின் அடியில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

    இதனைக்கண்ட வீட்டின் உரிமையாளர் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் சதீஸ்குமார் தலைமயைில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    5 அடி நீளம் கொண்ட அந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த சென்னிமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    • தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
    • ஏலகிரி மலை காட்டுப்பகுதியில் விட்டனர்

    ஜோலார்பே ட்டை:

    ஜோலா ர்பேட்டையை அடுத்த அம்மை யப்பன் நகர் ஊராட்சி தலைவர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 63).

    நேற்று மாலை இவரது வீட்டு வராண்டாவில் உள்ள ஸ்லாப் மீது 10 அடி நீள சாரைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை ஏலகிரி மலை காட்டுப்பகுதியில் விட்டனர்.

    • உளுந்தூர்பேட்டை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது போக்குவரத்து போலீஸ் நிலையம்.
    • 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது போக்குவரத்து போலீஸ் நிலையம். இந்நிலையில் இன்று காலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் போலீஸ் நிலையத்திலிருந்து அலுவலக பணி காரணமாக வெளியில் சென்றனர். அப்போது 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது. அப்போது பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    • 3 அடி நீளமுள்ள சாரைபாம்பு வீட்டிற்க்குள் புகுந்தது.
    • துப்புரவு பணியாளர் வெங்கடேசன் என்பவர் தைரியமாக வீட்டினுள் சென்று கையால் லாவகமாக சாரைபாம்பை பிடித்து எடுத்து வெளியே வந்தார்.

     மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சின்னசாமி கொட்டாய் பகுதியில் குடியிருந்து வருபவர் வள்ளி. இவர் வீட்டில் அனைவரும் டி.வி பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது 3 அடி நீளமுள்ள சாரைபாம்பு வீட்டிற்க்குள் புகுந்தது. இதனை கண்ட குடும்பத்தினர், பாம்பு, பாம்பு என அலறினார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த மாரண்ட அள்ளி பேரூராட்சி துப்புரவு பணியாளர் வெங்கடேசன் என்பவர் தைரியமாக வீட்டினுள் சென்று கையால் லாவகமாக சாரைபாம்பை பிடித்து எடுத்து வெளியே வந்தார்.

    இதன் பிறகே வள்ளி குடும்பம் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மது பாட்டில்கள் எடுக்க ஊழியர்கள் அங்குள்ள அறைக்குள் சென்றனர். அப்போது அங்கு சாரை பாம்பு ஒன்று இருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் மதுபான கடைக்கு சென்று சுமார் 3 மணி நேரம் போராடி சாரை பாம்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ளது போட்டுகாடு கிராமம். இங்கு தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மது பிரியர்கள் அதிகமானோர் இங்கு மது வாங்கி செல்வார்கள்.

    நேற்று மதியம் 12 மணிக்கு கடை திறந்து வியாபாரம் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மது பாட்டில்கள் எடுக்க ஊழியர்கள் அங்குள்ள அறைக்குள் சென்றனர். அப்போது அங்கு சாரை பாம்பு ஒன்று இருந்தது.

    இதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் மதுபாட்டில்களை எடுப்பதை நிறுத்திவிட்டு கடையில் இருந்து கூச்சல் போட்டபடி வெளியே ஓடி வந்து விட்டனர்.

    இதனால் குடிமகன்களுக்கு மது விற்பது நிறுத்தப்பட்டது. இதில் 3 மணி நேரம் மது பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பு காத்திருந்தனர்.

    இதனை அறிந்த ஏற்காடு தீயணைப்பு வீரர்கள் மதுபான கடைக்கு சென்று சுமார் 3 மணி நேரம் போராடி சாரை பாம்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

    இதன் பிறகே ஊழியர்கள் கடைக்குள் சென்று பணியில் ஈடுபட்டனர். பின்னர் மது பிரியர்கள் வரிசையாக நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.

    • பவானி அருகே உள்ள குதிரைக்கல் மேடு பேரேஜ் பகுதியில் பாம்பு இருப்பதாக பவானி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
    • சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள குதிரைக்கல் மேடு பேரேஜ் பகுதியில் பாம்பு இருப்பதாக பவானி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.

    இதையடுத்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது பேரேஜ் பகுதியில் தீயணைப்பு துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு இரும்பு குழாயின் உள்ளே பாம்பு ஒன்று இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் பாம்பு பிடிக்கும் சாதனத்தின் மூலம் சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர். தொடர்ந்து அந்த பாம்பை வன பகுதியில் தீயணைப்பு துறையினர் விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×