search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in the house"

    • வீட்டில் இருந்த பீரோவின் அடியில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையம் சூலைத் தெருவில் வீட்டில் இருந்த பீரோவின் அடியில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

    இதனைக்கண்ட வீட்டின் உரிமையாளர் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் சதீஸ்குமார் தலைமயைில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    5 அடி நீளம் கொண்ட அந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த சென்னிமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    ×