search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயக்கழிவு நீர்"

    • ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணி முத்தாறு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது.
    • சேலம் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு, உத்தமசோ ழபுரம் வழியாக திருமணி முத்தாறு செல்கிறது. தற்போது பெய்த மழை காரணமாக, திருமணி முத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்து செல்கிறது.

    சேலம்:

    ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணி முத்தாறு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது. சேலம் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு, உத்தமசோ ழபுரம் வழியாக திருமணி முத்தாறு செல்கிறது. தற்போது பெய்த மழை காரணமாக, திருமணி முத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்து செல்கிறது. இந்த பகுதியில் ஒரு சில சாயப்பட்டறைகளின் கழிவு நீர் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றி விடுவதாக புகார் எழுந்துள்ளது. அப்படி வெளியேற்றப்படும் கழிவுநீர், நுரை பொங்கி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவ தாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்து வருவதாகவும், கழிவுநீர் கலந்து செல்வதால், நுரை பொங்கி வருவதால் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயி கள் தெரிவிக்கின்றனர். திருமணிமுத்தாற்றில் சாய கழிவுநீரை கலப்பதை தடுக்க மாசுகட்டுப்பாடு வாரியம் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அப்போது தான் அதனை தடுக்க முடியும். மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது கழிவுநீர் வெளியேற்று வதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் திருமணிமுத்தாற்றில் ஆய்வு செய்தனர். சாய கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது

    சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாயப்பட்டறை கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்ட றையை கண்டறிந்து, அந்த பட்டறையை முடியும், மின் இணைப்பு துண்டிக்கப் பட்டும் வருகிறது. மாசு கட்டுப்பாடு வாரிய அனு மதி பெறாமல், சாயப்பட்ட றையின் கழிவுநீரை வெளியேற்றினால் அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர் அந்த பட்டறை மூடப்படும். கழிவுநீரினை முறையாக சுத்திகரிப்பு செய்யாத நிறுவனங்கள் மூடப்படும்.

    அபராதம் விதிக்கப்படும். அனுமதி பெறாத சாயப்பட் டறைக்கு வாடகைக்கு அளித்தால், அந்த உரிமையா ளர் மீது வழக்கு தொட ரப்படும். அந்த உரிமையாள ரிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூ லிக்கப்படும்.திருமணி முத்தாற்றில் சாயக்கழிவு நீரை கலப்பதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
    • மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    திருப்பூர் :

    திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூா்பேட்டையைச் சோ்ந்த சகுந்தலா கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூரை அடுத்த சா்க்காா் பெரியபாளையத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நாள்தோறும் 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலந்து விடுகின்றனா். இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    ஆகவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி சாா்க்காா் பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×