search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதாக புகார்
    X

    கோப்புபடம்.

    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதாக புகார்

    • 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
    • மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    திருப்பூர் :

    திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூா்பேட்டையைச் சோ்ந்த சகுந்தலா கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூரை அடுத்த சா்க்காா் பெரியபாளையத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நாள்தோறும் 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலந்து விடுகின்றனா். இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    ஆகவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி சாா்க்காா் பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×