என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயக்கழிவு நீர்"

    • சாய கழிவில் மூழ்கியதால் நாகலிங்கம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    மதுரையை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 60). இவர் திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல 3 பேருடன் சேர்ந்து ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை ஆலையில் பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அங்கு பணியின் போது தண்ணீர் எடுக்கச் சென்ற நாகலிங்கம் மூடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சாய கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது நாகலிங்கம் சாயக்கழிவுநீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடினார். அவரை மீட்க முயன்ற போது முடியவில்லை. உடனே திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த நாகலிங்கத்தை மீட்டனர். இருப்பினும் சாய கழிவில் மூழ்கியதால் நாகலிங்கம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மத்திய போலீசார் உடலை மீட்டு பிரேதபரி சோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
    • மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    திருப்பூர் :

    திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூா்பேட்டையைச் சோ்ந்த சகுந்தலா கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூரை அடுத்த சா்க்காா் பெரியபாளையத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நாள்தோறும் 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலந்து விடுகின்றனா். இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    ஆகவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி சாா்க்காா் பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணி முத்தாறு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது.
    • சேலம் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு, உத்தமசோ ழபுரம் வழியாக திருமணி முத்தாறு செல்கிறது. தற்போது பெய்த மழை காரணமாக, திருமணி முத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்து செல்கிறது.

    சேலம்:

    ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணி முத்தாறு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது. சேலம் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு, உத்தமசோ ழபுரம் வழியாக திருமணி முத்தாறு செல்கிறது. தற்போது பெய்த மழை காரணமாக, திருமணி முத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்து செல்கிறது. இந்த பகுதியில் ஒரு சில சாயப்பட்டறைகளின் கழிவு நீர் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றி விடுவதாக புகார் எழுந்துள்ளது. அப்படி வெளியேற்றப்படும் கழிவுநீர், நுரை பொங்கி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவ தாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்து வருவதாகவும், கழிவுநீர் கலந்து செல்வதால், நுரை பொங்கி வருவதால் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயி கள் தெரிவிக்கின்றனர். திருமணிமுத்தாற்றில் சாய கழிவுநீரை கலப்பதை தடுக்க மாசுகட்டுப்பாடு வாரியம் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அப்போது தான் அதனை தடுக்க முடியும். மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது கழிவுநீர் வெளியேற்று வதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் திருமணிமுத்தாற்றில் ஆய்வு செய்தனர். சாய கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது

    சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாயப்பட்டறை கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்ட றையை கண்டறிந்து, அந்த பட்டறையை முடியும், மின் இணைப்பு துண்டிக்கப் பட்டும் வருகிறது. மாசு கட்டுப்பாடு வாரிய அனு மதி பெறாமல், சாயப்பட்ட றையின் கழிவுநீரை வெளியேற்றினால் அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர் அந்த பட்டறை மூடப்படும். கழிவுநீரினை முறையாக சுத்திகரிப்பு செய்யாத நிறுவனங்கள் மூடப்படும்.

    அபராதம் விதிக்கப்படும். அனுமதி பெறாத சாயப்பட் டறைக்கு வாடகைக்கு அளித்தால், அந்த உரிமையா ளர் மீது வழக்கு தொட ரப்படும். அந்த உரிமையாள ரிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூ லிக்கப்படும்.திருமணி முத்தாற்றில் சாயக்கழிவு நீரை கலப்பதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • வாலிபாளையம் பகுதிகளில் உள்ள கெமிக்கல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • சுத்திகரிக்காத கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டதும் கண்டறியப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மந்திரி வாய்க்காலில் அவ்வப்போது சாயக்கழிவுநீர் பாய்ந்தோடுவது வழக்கமாக உள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் ஆய்வு நடத்திய மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை அதிகாரிகள், லட்சுமி நகரில் இயங்கிய ஒரு முறைகேடு பட்டன் - ஜிப் நிறுவனத்தை கண்டுபிடித்து, மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.

    கடந்த 10-ந்தேதி, வாலிபாளையம் பகுதிகளில் உள்ள கெமிக்கல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை, சாக்கடை கால்வாயில் வெளியேற்றியது தெரிய வந்தது. இதனால் டைஸ் அண்டு கெமிக்கல் நிறுவனங்கள், பேக்கிங் பிரிவு மற்றும் ஆய்வகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவில் அருகே மந்திரி வாய்க்காலில் இளஞ்சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது. மேலும் நொய்யல் ஆற்றில் கலந்தது.

    இதையடுத்து மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை பொறியாளர் லாவண்யா தலைமையிலான குழுவினர், நடத்திய ஆய்வில் கொங்கு மெயின் ரோடு, முத்துநகர் பகுதியில் 2 பிரின்டிங் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்கியதும், சுத்திகரிக்காத கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனங்கள் இயங்கிய வாடகை கட்டிடங்களில் மின் இணைப்புகளை துண்டிக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    ×