search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வீஸ் சென்டர்"

    • தொழிலாளர்களின் வயதை 18 ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    • .கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினர்.

    உடுமலை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உடுமலை தாலுகா இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுதுபார்ப்போர் நலச்சங்கம் , தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை நல சங்கம் சார்பில் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது .கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினர். பின்னர் தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் தலைமை நலச்சங்கம் பொதுச்செயலாளர் குமாரவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு பொதுத்துறை நிறுவன பெட்ரோல் பங்குகளில் சர்வீஸ் சென்டர் துவங்க இருப்பதால் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது. ஆகையால் சர்வீஸ் சென்டர் அமைக்க தடை விதிக்க வேண்டும். மற்றும் பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வயதை 18 ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் உடுமலை தாலுகா இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் தலைவர் செந்தில்குமார், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சௌந்தரராஜன், துணை செயலாளர் லட்சுமணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மதுசூதனன், பழனிச்சாமி, குமரவேல் ,தம்புராஜ், மணிகண்டன் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த15 வருடமாக சேராக்குப்பத்தில் தங்கி சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தனர்.
    • சர்வீஸ் சென்டரில் மதன்ராஜ், மற்றும்ராதாகாந்த் ஆகியோர் வேலை பார்த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி கண்டர க்கோட்டையை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மகன் மதன்ராஜ் (வயது19) அசாம் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் ராதா காந்த் (36) இவர்கள் கடந்த15 வருடமாக சேராக்குப்பத்தில் தங்கி சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தனர். நேற்று கார் சர்வீஸ் சென்டரில் மதன்ராஜ், மற்றும்ராதாகாந்த் ஆகியோர் வேலை பார்த்தனர். அப்போது மின்இணைப்புமீட்டர் பாக்ஸில் எதிர்பாரா தவிதமாக,தண்ணீர் பட்டு மின்சாரம் தாக்கியதில் மதன்ராஜ் சம்பவ இடத்தில் இறந்துவிட்டார், ராதா காந்த் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ராதா காந்தை குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதன்ராஜ் உடல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவம னையில்உள்ளது, இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    ×