search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல் நிலையங்களில் சர்வீஸ் சென்டர் திறக்க தடை விதிக்க வேண்டும்
    X

    கோப்புபடம்

    பெட்ரோல் நிலையங்களில் சர்வீஸ் சென்டர் திறக்க தடை விதிக்க வேண்டும்

    • தொழிலாளர்களின் வயதை 18 ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    • .கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினர்.

    உடுமலை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உடுமலை தாலுகா இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுதுபார்ப்போர் நலச்சங்கம் , தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை நல சங்கம் சார்பில் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது .கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினர். பின்னர் தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் தலைமை நலச்சங்கம் பொதுச்செயலாளர் குமாரவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு பொதுத்துறை நிறுவன பெட்ரோல் பங்குகளில் சர்வீஸ் சென்டர் துவங்க இருப்பதால் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது. ஆகையால் சர்வீஸ் சென்டர் அமைக்க தடை விதிக்க வேண்டும். மற்றும் பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வயதை 18 ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் உடுமலை தாலுகா இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் தலைவர் செந்தில்குமார், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சௌந்தரராஜன், துணை செயலாளர் லட்சுமணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மதுசூதனன், பழனிச்சாமி, குமரவேல் ,தம்புராஜ், மணிகண்டன் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×