search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு"

    • நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சரக்கு’.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் 'சரக்கு' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மன்சூர் அலிகான், "சின்ன படங்களை எடுத்துக் கொண்டு வராதீர்கள் நஷ்டம் ஏற்படுகிறது என்று விஷால் சொன்னது தவறு, அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விஷால் நடிகர் சங்க தலைவராக அப்படி சொல்லக் கூடாது. ஏதோ அவர் பட்ட அனுபவத்தில் சொல்கிறார். ரூ.100 கோடி வைத்துக் கொண்டு விஷாலை வைத்து தான் படம் எடுக்க வேண்டுமா? நடிகர் சங்கத்தில் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும்.


    சித்தா என்ற படம் ரூ.3 கோடி செலவில் எடுக்கப்பட்டது தான், அது நன்றாக ஓடியது. அதுப்போலதான் ரூ.50 லட்சம் கொண்டு ஒருவர் சமூகத்தால் வரவேற்கும் படத்தை கொடுக்கலாம். அதனால் விஷால் பேசியது தவறு. பான் இந்தியா திரைப்படமாக எடுத்தால் தான் சினிமா பார்க்க வேண்டும் என்பது இல்லை. சரக்கு மிகச்சிறந்த திரைப்படம் நல்லா இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் தணிக்கைக்குழுவில் அம்பானி சொல்லாதே, அதானி சொல்லாதே என்று கூறுகின்றனர்" என்று பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மன்சூர் அலிகான் நடித்துள்ள திரைப்படம் 'சரக்கு'.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் 'சரக்கு' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    சரக்கு இசை வெளியீட்டு விழா

    இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், "கையில் ஒரு மாலையுடன் வந்து சற்றும் எதிர்பாராதவிதமாக தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனைக் கண்டு தொகுப்பாளினி கடும் கோபமடைந்தார். 'எல்லோருக்கும் மாலை போட்டிங்க நம்மை வித்தியாசமான வார்த்தைகளை கூறி வரவேற்பவருக்கு மாலை போட்டோமா?" என அவர் பேசினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த மன்சூர் அலிகானிடம் பத்திரிகையாளர்கள் ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் அப்படி நடந்தது தவறு தான். அவருடைய செயலைக் கண்டு நானே அதிர்ச்சியடைந்தேன். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறி, கூல் சுரேஷையும் மன்னிப்பு கேட்க சொன்னார்.


    தொகுப்பாளினிக்கு மாலை போட்ட கூல் சுரேஷ்

    இதைத்தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ் இந்நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து நானும் அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்தோம் என கூற, அந்த தொகுப்பாளினி 'நான் உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை' என பதில் கொடுத்தார். தொடர்ந்து தான் தெரியாமல் அப்படி செய்துவிட்டதாகவும், மன்னிச்சுக்கோ தங்கச்சி' என மன்னிப்பு கேட்டார். கூல் சுரேஷின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    • 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சீராப்பள் ளியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் உள்பட 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.

    அங்கு அவர்கள் வழி பாடு நடத்திவிட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் அதே சரக்கு வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். சீராப்பள்ளி யைச் சேர்ந்த தர்மலிங்கம் (வயது 50) சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார். ராசிபுரம்-நாம கிரிப்பேட்டை சாலையில் சீராப்பள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டி ருந்த போது திடீரென்று ஸ்டேரிங் லாக் ஆகிவிட்ட தாக கூறப்ப டுகிறது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அப்போது கூச்ச லிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து காயம் பட்ட வர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசி புரம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 14 பெண்கள் உட்பட 22 பேர் காயம் அடைந்தனர். இவர்க ளில் 17 பேர் ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:-

    வனிதா (26), ராமாயி (65), பாப்பு (48), சரஸ்வதி (22), கல்பனா (46), அத்தாயி (70), லட்சுமி (58), சின்ன பொன்னு (65), ஜெயம்மாள் (44), ருகமணி(40), இளைய நிலா (13), பரிமளா (45), சிவா(13), தங்கமணி (48), இளங்கோ (45), தஸ்வின் (10), கோல் வேந்தன் (3) இவர்கள் அனைவரும் தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    விசாரணை

    மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த நந்தகுமார் (17), கவிதா (36), பவுன் (55), சிவகாமி (55), ஆதித்தன் (8) உள்பட 5 பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இதில் பவுன் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி னார். டிரைவர் தர்ம லிங்கம் காயம் இன்றி தப்பிய தாக கூறப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்த வர்கள் அனைவரும் சீராப் பள்ளியை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து குறித்து நாம கிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திராவிலிருந்து நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படுகிறது. பின்னர் கிட்டங்கிக்கு அனுப்பி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து 58 வேகன்களில் 3600 டன் ரேஷன் அரிசி, சரக்கு ரயில் மூலமாக இன்று நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ரேஷன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • 3 வாலிபர்கள்-3 மாணவிகள் சிக்கினர்
    • போலீசார் விசாரணை தீவிரம்

    நாகர்கோவில்:

    மேலை நாட்டு கலாசாரத்தில் மூழ்கி வரும் இளம்பெண்கள், இளைஞர்கள் சமீபகாலமாக எல்லை மீறி வருகின்றனர். இது கலாசார சீரழிவாக மாறி நிற்பது தான் வேதனையான ஒன்று. இப்படி ஒரு கலாசார சீரழிவு தான் குமரி மாவட்டத்தில் நடந்து தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குளச்சலை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி தனது பிறந்த நாளை சக தோழர்களுடன் கொண்டா டிய போது, அங்கு வந்த பள்ளி தோழன் பிறந்த நாள் கொண்டாடிய மாணவியை தாக்கி உள்ளார்.

    இது தொடர்பாக வந்த புகாரை போலீசார் விசாரித்த போது, கிணறு வெட்ட பூதம் பிறந்த கதையாக ஒருவருக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தை மறந்து இளம்பெண்களும், இளைஞர்களும் மதுபான விருந்து, உல்லாசம் என ஒரு வீட்டில் அடிக்கடி கூடி கும்மாளமிட்டது தெரிய வந்தது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஒரு மாணவியின் கண்ணீர் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆடியோவில் பேசிய மாணவி, 2 தோழிகளின் அழைப்பால் விருந்து ஒன்றுக்குச் சென்றேன். ஆனால் அங்கு சில இளைஞர்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இருப்பினும் விருந்தில் பங்கேற்றேன்.

    அது மது விருந்து மட்டும் தான் என்று நினைத்தேன். ஆனால் நேரம் செல்லச் செல்ல உல்லாச விருந்தாக மாறியது. இதில் நானும் என்னை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னர் நான் தோழிகளை சந்திப்பதை தவிர்த்தேன். ஆனால் அவர்கள் அடிக்கடி பார்ட்டியில் சந்தித்துள்ளனர்.

    இது தொடர்பாக செல்போனில், கான்செப்ட்... சரக்கு பார்ட்டி...ஜாயிண்ட் என குறுந்தகவல்அனுப்பினர். என்னையும் பார்ட்டியில் கலந்து கொள்ளும் படி வற்புறுத்தினர். தற்போது என்னை அதில் சிக்க வைத்து விட்டு அவர்கள் தப்பிக்கப் பார்க்கின்றனர் என கண்ணீருடன் பேசி இருந்தார்.

    இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தவின் பேரில் தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர். முதலில் பிறந்த நாள் விருந்து நடந்ததாக கூறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பார்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மது பாட்டில்கள், ஆணுறைகள், கிழிந்த உடைகள் உள்ளிட்ட பல விரும்பத்தகாத பொருட்கள் கிடந்துள்ளன. இதனைத் தொடர்ந்து நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசவே போலீசார் தங்கள் விசாரணை முறையை மாற்றினர்.

    அப்போது காதல் என்ற பெயரில் தோழிகளை விருந்துக்கு அழைக்கும் வாலிபர்கள், பின்னர் தங்கள் இஷ்டத்திற்கு அவர்களை மயக்கி உல்லாசத்திற்கு பயன்படுத்தி உள்ளனர்.

    ஒரு கட்டத்தில் இந்த வலையில் விழுந்த மாணவி கள், இளம்பெண்கள் அதன்பிறகு வேறு வழியின்றி விபரீதம் உணராமல் விருந்து நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் படுக்கை விருந்தில் பங்கேற்ற 3 வாலிபர்கள் மற்றும் 3 இளம்பெண்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அவர்கள் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர்.

    பெண்களின் நிலை கருதி போலீசார் தொடர்ந்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விருந்துக்கு தெரியாமல் சென்ற இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து வாலிபர்கள் மிரட்டி இருக்கலாம். அதனால் பயந்து போன பெண்கள், அடிக்கடி விருந்துக்குச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசா ருக்கு உள்ளது. அதன் அடிப்ப டையிலும் போலீசார் தங்கள் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

    கான்செப்ட்... சரக்கு பார்ட்டி...ஜாயிண்ட் விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கலாசாரம் பெரும் நகரங்களில் நடப்பதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில் கடை ேகாடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகளின் பெற்றோர் வயிற்றில் நெருப்பை கட்டி இருப்பது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ×